இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2 நாட்களாக நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் இருக்க நாணய கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக முடிவு செய்துள்ளது என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆர்பிஐ கவனம் செலுத்தும் என்பதை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி செய்துள்ளார். சந்தை கணிப்பின் படி ஆர்பிஐ அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைப்பிற்குப் பின்பு வட்டியை குறைக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம் 16 மாதங்களாக இந்தியாவில் ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் என்ற நிலையில் மாறாமல் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியாகும் நிலையில் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது.
இதனால் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த முறை, 2024 பொதுத் தேர்தலில் புதிய கொள்கைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் RBI கொள்கையின் போக்கு முக்கியமானதாக இருக்கும், இது புதிய அரசாங்கம் இந்தியாவின் பட்ஜெட்டை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும். இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ-யின் வட்டி விகித குறைப்பு இந்திய பொருளாதாரத்திற்கு புதிய உந்து சக்தியாக இருந்திருக்கும், ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) வட்டி விகிதங்களை மாற்றாமல் பராமரித்துள்ளது. ரெபோ விகிதம் 6.5 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபசிலிடி (MSF) விகிதம் 6.75 சதவீதமாகவும், ஸ்டாண்டிங் டெபாசிட் ஃபசிலிடி (SDF) விகிதம் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், நாட்டின் உயரும் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார். 2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
ஆர்பிஐ முன்பு 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டதிலிருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என தனது மதிப்பீட்டை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மேலும், காலாண்டு வாரியான மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் காலாண்டு - 7.3 சதவீதம் (முன்னர் 7.1%)
செப்டம்பர் காலாண்டு - 7.2 சதவீதம் (முன்னர் 6.9%)
டிசம்பர் காலாண்டு - 7.3 சதவீதம் (முன்னர் 7.0%)
மார்ச் காலாண்டு - 7.2 சதவீதம் (முன்னர் 7.0%)
இதேவேளையில் ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவில் கவர்னர் சக்திகாந்த தாஸ் 2024-25 நிதிய ஆண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி மாற்றமின்றி 4.5 சதவீதமாகவே வைத்துள்ளது. காலாண்டு வாரியான கணிப்புகளும் முன்னர் போலவே 4.9%, 3.8%, 4.6%, 4.5% ஆகவே உள்ளன.
பணவீக்கம் குறைந்து வரும் போக்கில் இருந்தாலும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றங்கள் இந்த சரிவு பாதையைப் பெரிய அளவில் தாமதப்படுத்தியுள்ளது என்று கவர்னர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கத்தை நிலையான அடிப்படையில் 4 சதவீதத்திற்குக் கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கவர்னர் தாஸ் வலியுறுத்தினர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications