ரெப்போ விகிதம் குறைத்தால் என்னாகும்..? எச்சரிக்கும் நிபுணர்..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது நடப்பு நிதியாண்டின் ஐந்தாவது நாணய கொள்கை முடிவுகளை இன்று (டிசம்பர் 6 ஆம் தேதி) அறிவிக்க உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆறு உறுப்பினர் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) நாட்டின் தற்போதைய பொருளாதாரம், பணவீக்கம் ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டு நாணய கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்கும்.

கடந்த MPC கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 6.5% ஆக நிலை நிறுத்தியது, இது தொடர்ச்சியாக பத்தாவது கூட்டத்தில் வட்டி விகிதம் மாறாமல் இருந்தது. இருப்பினும், ஆர்பிஐ தனது நாணய கொள்கை நிலைப்பாட்டை 'withdrawal of accommodation’ என்பதிலிருந்து 'neutral’ ஆக மாற்றியது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

 ரெப்போ விகிதம் குறைத்தால் என்னாகும்..? எச்சரிக்கும் நிபுணர்..!!


ஆனால் இந்த நாணய கொள்கை கூட்டத்தின் விளைவு குறித்து சந்தை நிபுணர்கள் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். சிலர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், சிலர் சமீபத்திய பொருளாதார குறிகாட்டிகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி தனது தற்போதைய நிலைப்பாட்டை அதாவது ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 6.5 சதவீதமாக வைக்கலாம் என்று நம்புகின்றனர்.

RBI வட்டி விகிதத்தை குறைத்தால், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படலாம். ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான அஜித் பானர்ஜி இதுக்குறித்து கூறுகையில், மக்களிடையே கடன் அளவு அதிகரித்து வருவதால், முன்கூட்டியே வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் பலதரப்பட்ட அபாயங்கள் ஏற்படுத்தும்.

சந்தையில் அதிகப்படியான அசர்ட் பபுள் உருவாகும், இதனால் பொருளாதார நிலையற்ற தன்மையை அதிகரிக்கும். இதை தவிர்க்கும் பொருட்டு கவனமான அணுகுமுறை தேவை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

அதாவது மக்கள் ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையில் இருக்கும் போது, வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் அதிகமாக கடன் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரிக்கும். இதன் வாயிலாக அசர்ட் பபுள் உருவாகி பொருளாதார நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கும். இந்தியாவில் கிரெடிட் கார்டு கடன் இருப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதேபோல் பாதுகாப்பற்ற கடன் அளவும் அதிகரித்துள்ளது.

RBI-யின் முடிவு சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவராலும் நெருக்கமாக கண்காணிக்கப்படும், ஏனெனில் இது வரும் மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் பாதையை வடிவமைப்பது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீடுகளிலும் குறிப்பாக FPI முதலீடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+