இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2 நாட்களாக நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவிலும் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் இருக்கக்கூடும் என்றும், இக்கூட்டத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆர்பிஐ கவனம் செலுத்தக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இது உண்மையாகும் பட்சத்தில் நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருக்கும். இதன் மூலம் 16 மாதங்களாக இந்தியாவில் வட்டி விகிதம் மாற்றம் இருக்காது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன? : ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமே ரெப்போ விகிதம் ஆகும். இந்த ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குகின்றன.
எனவே, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வட்டி விகிதமும் குறையும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் வட்டி விகிதம் அதிகரிக்கும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
முடிவு எப்போது தெரியவரும்?: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ஜூன் 7 (இன்று) காலை 10 மணிக்கு நாணய கொள்கை குழு-வின் 2 நாள் கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் குறித்து மே 17 முதல் 30 வரை நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் 72 பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆய்வில், இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே மாற்றமின்றி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் படி, பணவீக்க கட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுப்பது அவசியம் என ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதத்தைக் குறைப்பது தற்போது தேவையில்லை என தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கும், பணவீக்க கட்டுப்பாட்டிற்கும் இடையே சமநிலை காண்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய பணிகளில் ஒன்று. தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கம் கவலைக்குரிய அளவில் இருப்பதால், வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பதே பொருத்தமான முடிவாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியும், கனடா மத்திய வங்கியும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பிற்கு முன்பே பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளனர். இதனால் ஆர்பிஐ இக்கூட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியாகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது.
இதனால் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த முறை, 2024 பொதுத் தேர்தலில் புதிய கொள்கைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் RBI கொள்கையின் போக்கு முக்கியமானதாக இருக்கும், இது புதிய அரசாங்கம் இந்தியாவின் பட்ஜெட்டை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும்.
மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதத்தில் நாட்டின் உணவு மற்றும் குளிர்பானங்களின் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஆர்பிஐ ரெப்போ விகிதத்தைக் குறைக்க முக்கிய தடையாகப் பார்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications