ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ மாறாது..!

அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்து இருந்த ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தப்படி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தை மாற்றம் செய்யவில்லை என அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம்

இன்று வெளியாகியுள்ள நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீத வட்டி விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 5:1 வாக்குகள்

5:1 வாக்குகள்

நாணய கொள்கை கூட்டத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வட்டியைக் குறைக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அடங்கிய இக்குழுவில் 5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால் எவ்விதமான கூடுதல் ஆலோசனையும் இல்லாமல் வட்டி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

 வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் கடன் வாங்கியவர்களுக்கும், வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கும் எவ்விதமான வட்டி உயரும் இருக்காது. இதனால் ஓய்வுக் காலத்திற்காக நீண்ட கால முதலீடு மற்றும் டெப்பாசிட் செய்துள்ளவர்கள் சற்று குறைவான வட்டி விகிதம் மட்டுமே கிடைக்கும்.

 சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்கு ரிசர்வ் வங்கி சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வட்டி விகிதத்தை மாற்றவில்லை என அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் பல வளர்ச்சி காரணிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

மேலும் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சியை அடையும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

 நுகர்வோர் பணவீக்கம்

நுகர்வோர் பணவீக்கம்

இதோடு நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 2021-22ஆம் நிதியாண்டில் 5.7 வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். முன்பு நுகர்வோர் பணவீக்கம் அளவீடு (CPI) 5.1 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, தற்போது நாட்டின் வர்த்தக நிலையை ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி இதை 5.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 நுகர்வோர் பணவீக்கம் அளவீடுகள்

நுகர்வோர் பணவீக்கம் அளவீடுகள்

மொத்த நிதியாண்டுக்கும் நுகர்வோர் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ள ஆர்பிஐ நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 5.9 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 5.3 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+