இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை டிசம்பர் 11-ல் பதவியேற்கவுள்ளார். இவர் தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பதவியேற்கிறார்.
சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, நாளை பதவியேற்கும் சஞ்சய் மல்ஹோத்ரா அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியை வழிநடத்துவார். மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சம்பளம் என்ன: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மாதத்திற்கு ஒரு பெரிய சம்பளம் வாங்குகிறார் என்பதை பிரஸ் டிரஸ்ட் இந்தியா (PTI) 2017 அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி 01, 2016 முதல் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஆளுநரால் பெறப்பட்ட அடிப்படை சம்பளம் ரூ.90,000 லிருந்து அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. அவர்களின் சம்பளம் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகளை விட மிகக் குறைவு ஆகும்.
மல்ஹோத்ராவின் அனுபவம்: ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா, ஐஐடி கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
அவரது கிட்டத்தட்ட 33 ஆண்டுகால வாழ்க்கையில், மின்சாரம், நிதி மற்றும் வரிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பணியாற்றியுள்ளார்.
அவர் இப்போது நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். அவர் முன்பு நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையில் செயலாளராக பணியாற்றினார்.அவர் மாநில மற்றும் தேசிய அளவில் நிதி மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது தற்போதைய பொறுப்புகளின் ஒரு பகுதியாக, அவர் நேரடி மற்றும் மறைமுக வரிக் கொள்கைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவர் நாளை டிசம்பர் 11-ல் ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications