இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை டிசம்பர் 11-ல் பதவியேற்கவுள்ளார். இவர் தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பதவியேற்கிறார்.
சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, நாளை பதவியேற்கும் சஞ்சய் மல்ஹோத்ரா அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியை வழிநடத்துவார். மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சம்பளம் என்ன: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மாதத்திற்கு ஒரு பெரிய சம்பளம் வாங்குகிறார் என்பதை பிரஸ் டிரஸ்ட் இந்தியா (PTI) 2017 அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி 01, 2016 முதல் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஆளுநரால் பெறப்பட்ட அடிப்படை சம்பளம் ரூ.90,000 லிருந்து அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. அவர்களின் சம்பளம் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகளை விட மிகக் குறைவு ஆகும்.
மல்ஹோத்ராவின் அனுபவம்: ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா, ஐஐடி கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
அவரது கிட்டத்தட்ட 33 ஆண்டுகால வாழ்க்கையில், மின்சாரம், நிதி மற்றும் வரிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பணியாற்றியுள்ளார்.
அவர் இப்போது நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். அவர் முன்பு நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையில் செயலாளராக பணியாற்றினார்.அவர் மாநில மற்றும் தேசிய அளவில் நிதி மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது தற்போதைய பொறுப்புகளின் ஒரு பகுதியாக, அவர் நேரடி மற்றும் மறைமுக வரிக் கொள்கைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவர் நாளை டிசம்பர் 11-ல் ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications