Repo Rate: ரெப்போ விகிதம்.. RBI முடிவு என்னவாக இருக்கும்.. சந்தை ஆய்வுகள் கூறுவது இதுதான்..?

இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், OPEC நாடுகள் ஒரு நாளுக்கு 1.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் கட்டாயம் பணவீக்கம் அதிகரிக்கும், ஏற்கனவே இந்தியாவில் ஆர்பிஐ அளவீட்டுக்கு அதிகமாக பணவீக்கம் இருக்கும் நிலையில் இன்று சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு ரெப்போ விகிதம் குறித்து என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து சந்தையில் பல தரப்பினர் ஆய்வு செய்துள்ளனர்.

ரெப்போ விகிதம்.. RBI முடிவு என்னவாக இருக்கும்.. சந்தை ஆய்வுகள் கூறுவது இதுதான்..?

ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிடும் வேளையில் SBI ஆராய்ச்சி பிரிவின் Ecowrap அறிக்கையின்படி, RBI அதன் வட்டி விகித உயர்வை இக்கூட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் கூட்டத்தில் ரெப்போ விகித உயர்வை இடைநிறுத்த ரிசர்வ் வங்கிக்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அறிக்கை வலியுறுத்தியது.

இதேவேளையில் ஆலோசனை நிறுவனமான எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் படி, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அப்படி உயர்த்தினால் ரெப்போ விகிதம் 6.75 சதவீதமாக உயரும், இதனால் மக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் EMI தொகை அதிகரிக்க கூடும்.

மேலும் ரெயூட்டர்ஸ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கணிப்பில் ஆர்பிஐ ஏப்ரல் மாதம் MPC கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டு 2023 ஆம் ஆண்டில் இனி வட்டி விகிதத்தை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கணித்திருந்தது. இதற்கு காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் பல வங்கிகள் திவாலான நிலையிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியது.

ரெப்போ விகிதம்.. RBI முடிவு என்னவாக இருக்கும்.. சந்தை ஆய்வுகள் கூறுவது இதுதான்..?

பணவீக்கம் குறித்து பயப்பட இந்தியாவில் பணவீக்கத்தின் நிலை எப்படியுள்ளது. ஆர்பிஐ படி இந்தியாவில் பணவீக்கம் 4 முதல் 6 சதவீதம் வரையில் இருக்க வேண்டும் என்பது ஆர்பிஐ லிமிட். ஆனால் ஜனவரி மாதம் 6.52 சதவீதமாகவும், பிப்ரவரி 6.44 சதவீதமாகவும் இருந்தது. கட்டாயம் மார்ச் மாதமும் பணவீக்கம் உயர்வாக தான் இருக்கும், மார்ச் தரவுகளை ஆர்பிஐ இன்று நாணய கொள்கையில் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரையில் நடந்த ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகளவிலானோர் கணித்தாலும், ஆர்பிஐ பணபுழக்க அளவீட்டை முழுமையாக கணித்த பின்பு தான் இந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+