அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ரூமென்ட் (பிபிஐக்கள்) மற்றும் கேஒய்சி வழிகாட்டுதல் தொடர்பான சில விதிமுறைகளுக்கு இணங்கவில்லை.
இந்தியாவில் நிதியியல் மோசடிகள் மற்றும் நிதியியல் தகவல் திருட்டுகள் அதிகளவில் நடக்கும் காரணத்தால் அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த விதிமுறைகளுக்கு இணங்காத அனைத்து தரப்பினருக்கும் கடுமையான அபராதம் அல்லது நடவடிக்கை எடுத்து வருகிறது, இதில் எவ்விதமான பாரபட்சம் காட்டப்படுவது இல்லை.
இந்த நிலையில் பிபிஐ மற்றும் கேஒய்சி விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பேமெண்ட் சந்தை
இந்திய பேமெண்ட் சந்தை விஸ்பரூபம் எடுத்திருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் இச்சந்தை வர்த்தகத்தை கைப்பற்ற பெரும் போட்டிப்போட்டு வருகிறது. இந்த மாபெரும் போட்டியில் அமேசான் பே நிறுவனமும் உள்ளது, ஆனால் நிறுவனத்தால் போன் பே, கூகுள் பே போன்று பெரிய வெற்றியை அடைய முடியவில்லை.
அமேசான் பே
இதற்கிடையில் அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பிபிஐ மற்றும் கேஒய்சி விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.3.06 கோடி அபராதம் விதித்துள்ளது. இதற்கான அறிக்கையில் ஆர்பிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டு உள்ளது.
கேஒய்சி தேவைகள்
ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கேஒய்சி தேவைகள் குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளுக்கு அந்த நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, அமேசான் பே (இந்தியா) நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய விதிமுறைகளுக்கு இணங்காததற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் விளக்க அறிவுறுத்தியது.
பண அபராதம்
இந்த நிலையில் அமேசான் பே நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை பூர்த்தி செய்யாதது உறுதி செய்யப்பட்ட நிலையில் மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்தது என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அமேசான்.காம்
அமேசான் பே என்பது இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவாகும். இந்த நிறுவனத்திற்கு தான் தற்போது ஆர்பிஐ 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
3 வங்கிகள்
ஆர்பிஐ கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் HCBL கூட்டுறவு வங்கி - லக்னோ (உத்தரப் பிரதேசம்), ஆதர்ஷ் மஹிலா நகரி சககாரி வங்கி மரியடிட் - அவுரங்காபாத் (மகாராஷ்டிரா), ஷிம்ஷா சககாரா வங்கி நியாமிதா - மத்தூர், கர்நாடகாவில் மண்டியா மாவட்டம் ஆகிய மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கடன் வழங்குபவர்களின் தற்போதைய பணப்புழக்க நிலை காரணமாக அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
5000 ரூபாய்
இதைதொடர்ந்து உரவகொண்டா கூட்டுறவு நகர வங்கி - உறவகொண்டா (அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்) மற்றும் ஷங்கர்ராவ் மொஹிதே பாட்டீல் சககாரி வங்கி - அக்லுஜ் (மகாராஷ்டிரா) ஆகிய இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் வரை மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications