இந்திய ரிசர்வ் வங்கி 5 கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்குபவர்களின் நிதி நிலைமை மோசமடைந்ததை அடுத்துப் பணம் எடுப்பது உட்படப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்குத் தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் இந்த 5 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட அளவிலான தொகையை மட்டுமே தங்களுடைய கணக்கில் இருந்து எடுக்க முடியும்.
இதேபோல் வங்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், இந்த 5 வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி, கடன்களை வழங்கவோ, முதலீடு செய்யவோ, எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ, அதன் சொத்துக்களை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் நிதி நிலை மற்றும் கணக்குகளைத் தொடர்ந்து ஆய்வு செய்வது மூலம் முறைகேடுகளைத் தடுப்பது மட்டும் அல்லாமல் ஆர்பிஐ விதிமுறைகளை வங்கிகள் பின்பற்றுகிறாதா என்பதை உறுதி செய்து இந்திய வங்கி அமைப்பை மேம்படுத்த முடியும்.
3 வங்கிகள்
ஆர்பிஐ வெளியிட்டு உள்ள அறிக்கைகள் படி HCBL கூட்டுறவு வங்கி - லக்னோ (உத்தரப் பிரதேசம்), ஆதர்ஷ் மஹிலா நகரி சககாரி வங்கி மரியடிட் - அவுரங்காபாத் (மகாராஷ்டிரா), ஷிம்ஷா சககாரா வங்கி நியாமிதா - மத்தூர், கர்நாடகாவில் மண்டியா மாவட்டம் ஆகிய மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கடன் வழங்குபவர்களின் தற்போதைய பணப்புழக்க நிலை காரணமாக அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
5000 ரூபாய்
இததொடர்ந்து உரவகொண்டா கூட்டுறவு நகர வங்கி - உறவகொண்டா (அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்) மற்றும் ஷங்கர்ராவ் மொஹிதே பாட்டீல் சககாரி வங்கி - அக்லுஜ் (மகாராஷ்டிரா) ஆகிய இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் வரை மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
மொத்தம் 5 வங்கிகள்
இந்த 5 கூட்டுறவு வங்கிகளின் தகுதியான டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் இன்சூரன்ஸ் க்ளைம் தொகையைப் பெற உரிமை உண்டு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்
ஆர்பிஐ ஒரு வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டால் Deposit Insurance and Credit Guarantee Corporation திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பாதுகாப்பு வாயிலாக 5 லட்சம் ரூபாய் வரையிலும் பெற முடியும்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications