மத்திய அரசின் உள்கட்டமைப்பு துறை முதலீட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின் முக்கிய சாதனையாகக் கருதப்படும் உள்கட்டமைப்பு துறை முதலீட்டின் வேகத்தை ஆர்பிஐ கட்டுப்பாடுகள் குறைக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளது. இந்த வழிக்காட்டுதல் படி கட்டுமான நிலையில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான provisioning அதாவது கட்டுமான திட்டத்தில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கடன் அளிக்கப்பட்ட கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படக்கூடிய நிதி சிக்கல்களைக் கண்டறிந்து கண்காணிப்பதையும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
ஒதுக்கீடு என்பது எதிர்பார்க்கப்படும் இழப்புகளைச் சமாளிக்க வங்கிகளின் கணக்கில் இருந்து ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையாகும். இந்த புதிய வழிகாட்டுதல்கள், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ள உள்கட்டமைப்பு திட்டங்களின் வேகத்தைப் பாதிக்கும் என்று வங்கிகள் மற்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், அதிகரிக்கப்பட்டு உள்ள ஒதுக்கீடுகள் மூலம் வங்கிகள் கடன் அளிக்கும் நிதித்தொகை குறையும் ஆபத்து உள்ளது. இதேபோல் உள்கட்டமைப்பு திட்டங்களில் ரிஸ்க் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கி இத்தகைய திட்டங்களுக்குக் கடன் அளிப்பதும், கடன் உத்தரவாதம் அளிப்பதும் குறையும்.
இதனால் உள்கட்டமைப்புக்கான மூலதன செலவீடுகள் (Capital Expenditure) பாதிக்கும், இதன் வாயிலாக இத்துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக உள்கட்டமைப்பு துறை முதலீடு கருதப்படுகிறது. NDA அரசு உள்கட்டமைப்பு திட்டங்களில் பெரும் முதலீடுகளை செய்து வருகிறது.
இந்த திட்டங்கள் பொருளாதாரத்தில் பன்மடங்கு (Multiplier Effect) தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-ம் ஆண்டிற்கான மூலதன செலவீடுகளுக்காக ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இது 2024-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மூலதன செலவிட்டு மதிப்பீடான ரூ.9.5 லட்சம் கோடியை விட 17 சதவீதம் அதிகமாகும்.
ரிசர்வ் வங்கியின் இந்த வரைவு விதிமுறைகள், வங்கிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை மத்திய வங்கிக்குத் தெரிவித்த பிறகு அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications