இந்தியாவில் கடன் செயலிகளால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், இது தொடர்பாகப் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டும், இதுகுறித்து புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய நிதியமைச்சகம் சில நாட்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆன்லைன் கடன் செயலிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டு முதல் பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையிலும், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் வேளையில் அதை முறைப்படுத்தும் விதமாக முக்கிய விதிமுறைகளை விதித்துள்ளது.
டிஜிட்டல் கடன் சேவை
டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் கடன் அளிக்கும் போதும், அக்கடனைத் திருப்பி வசூலிக்கும் போதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கில் இருந்து தான் செய்யப்பட வேண்டும்.
நேரடி பரிமாற்றம்
கடன் இடைநிலை செயல்பாட்டில் LSP களுக்குச் (lending service provider) செலுத்தப்படும் எந்தவொரு கட்டணமும் நேரடியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்தால் செலுத்தப்பட வேண்டும், கடன் வாங்கியவரால் அல்ல.
2021-ல் குழு
ரிசர்வ் வங்கி 2021 ஜனவரியில் டிஜிட்டல் கடன் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும் விதிமுறைகளைப் பரிந்துரைப்பதற்கும் ஒரு பணிக்குழுவை அமைத்தது. நவம்பரில் இந்தச் சிறப்புக் குழு டிஜிட்டல் கடன் வழங்குபவர்களுக்குக் கடுமையான விதிமுறைகளை முன் வைத்தது.
நோடல் ஏஜென்சி
இப் பணிக்குழு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அமைக்கப்படும் நோடல் ஏஜென்சி மூலம் டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளைச் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்துவது, டிஜிட்டல் கடன் எகோசிஸ்டம் அமைப்பில் பங்கேற்பாளர்களைச் சரிபார்க்க சுய-ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
மூன்று பிரிவுகள்
ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கடன் வழங்குபவர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. முதலாவதாக, ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்.
ரிசர்வ் வங்கி
இரண்டாவதாக, மற்ற சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை விதிகளின்படி கடன் வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆனால் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படாத அமைப்புகள்.
3வது பிரிவு தான் பிரச்சனை
மூன்றாவது தொகுப்பில் எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வராத அமைப்புகள் மறைமுகமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள். இந்தப் பிரிவு தான் தற்போது மக்களுக்கும் சரி, அரசுக்கும் சரி பெரும் பிரச்சனையாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications