சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்.. மக்களின் நிலைமை இப்படிதான் இருக்கு..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், யாரும் எதிர்பாராத விதமாக ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு வரியைக் குறைத்துள்ளது மூலம் மக்கள் வாங்கிய கடனில் அதிகளவிலான சேமிக்க முடியும் என கூறப்படும் வேளையில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்ற கதையாக ஆர்பிஐ வட்டியை குறைத்த நிலையில், வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைக்காமல் இழுத்து அடிக்கிறது. இது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்கு வேட்டு வைப்பது போல் உள்ளது. உண்மையில் ஏன் வங்கிகள் வட்டியை குறைக்க மறுக்கிறது.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்.. மக்களின் நிலைமை இப்படிதான் இருக்கு..!!

ஆர்பிஐ ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதால், தனிநபர்கள் வீடு, கார் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடன் பெறுவது மலிவாக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வட்டி விகித குறைப்பை வங்கிகள் மக்களுக்குக் கொடுக்க வேண்டும், ஆனால் இதை செய்ய மறுக்கிறது.

ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் ஒரு முக்கிய வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி இந்த ரெப்போ விகிதத்தைக் குறைக்கும்போது, வங்கிகளுக்கு கடன் வாங்கும் செலவுகள் குறையும். இதன் மூலம் வங்கிகள் மக்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் உடன் கடன்களை வழங்கும்.

வங்கிகள் ரெப்போ விகிதக் குறைப்பின் பலன்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவிற்குக் கடத்துகின்றன என்பதைப் பொறுத்தது தான் நாட்டின் பொருளாதாரமும், மோடி 3.0 அரசின் வெற்றியும் நடக்கும்.

வரலாற்று ரீதியாகவே, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புகளை வங்கிகள் உடனடியாகவும் முழுமையாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கடத்துவது கிடையாது. சில சமயங்களில் எவ்விதமான குறைப்பையும் செய்வது கிடையாது. இதேபோலத் தான் தற்போது நடக்கிறது, ரெப்போ விகித குறைப்பிற்குப் பின்பு ஹெச்டிஎப்சி வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வட்டி குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் ஏற்படும் தாமதத்திற்குப் பல காரணிகள் முக்கியமான காரணங்களாக உள்ளன. தற்போது, வங்கிகள் பணப்புழக்கப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அதாவது, அவர்களிடம் உடனடியாக கிடைக்கக்கூடிய பணம் குறைவாக உள்ளது. இதனால் வங்கிகளின் கடன் வர்த்தகத்திற்கான நிதி பற்றாக்குறை சற்று அதிகமாக உள்ளது. அதை சமாளிக்க ரெப்போ விகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் தொடர்ந்து அதிகப்படியான லாபத்தைப் பெறுவது மூலம் நிதி ஆதாரத்தைப் பெறும்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தைச் சரி செய்ய, ஆர்பிஐ பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது, அதில் முக்கியமான அறிவிப்பு ரெப்போ விகிதத்தைக் குறைப்பது தான். ஆனால் கடந்த 5 வருடத்தில் வட்டியை பல முறை உயர்த்தினாலும், நீண்ட காலத்திற்குப் பின்பு கடந்த வாரம் தான் குறைந்தது.

நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் வேளையிலும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதையும், நகர்ப்புற நுகர்வு குறைந்துள்ளதையும் கருத்தில் கொண்டு ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரிய அளவிலான வரிக்குறைப்புகளுடன் கூடுதல் நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+