மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கியமான ஆலோசனையை நடத்தினர்.
நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார் . இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் என்பது 5.25 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு , வாகன கடன்கள், தனிநபர் கடன்கள், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இந்தியர்களை பொறுத்தவரை இது சற்று ஏமாற்றம் அளிக்கும் ஒரு தகவலாகவே மாறி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி 0.25% என ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை அடுத்து ஏப்ரல் மாதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைத்து வட்டி விகிதத்தை 6 சதவீதம் என மாற்றியது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.5% என ஆனது. பின்னர் டிசம்பர் மாத கூட்டத்தில் மேலும் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் 125 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.25% வரை வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன் , வாகன கடன் , தங்கு நகை கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்தன .
இந்த முறை வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றே பெரும்பாலான நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு ஏற்ப ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தில் எந்த ,மாற்றத்தையும், கொண்டு வரவில்லை. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கும் கடன்களுக்கான வட்டி ஆகும். இது குறைக்கப்படவில்லை என்பதால் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டிகளை குறைக்காது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications