ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சனிக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளில் 98.18 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாகவும், 6,471 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டின் மே 19-ஆம் தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வாங்கி அறிவித்த மே 19-ஆம் தேதி அன்று மொத்தமாக ரூ.3.56 லட்சம் கோடி தொகை புழக்கத்தில் இருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி இந்தத் தொகை 6,471 கோடியாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது, 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் 7ஆம் தேதி வரையில் அனைத்து வங்கி கிளைகளிலும் டெபாசிட் செய்யலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது.

இன்னமும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி உள்ளது. அப்படி இல்லை என்றாலும் நீங்கள் தபால் நிலையங்கள் மூலமாகவும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம்.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பணத் தேவை விரைவாக பூர்த்தி செய்யும் விதமாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு அவற்றின் தேவையும் குறையத் தொடங்கியது. மறுபுறம் 2000 ரூபாய் நோட்டுகள் அன்றாட பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாமலும், அதிக மதிப்பு கொண்டதாகவும் இருந்ததால் கள்ள நோட்டுகள் மற்றும் பதுக்களுக்கும் வாய்ப்பாக மாறியது. இதனால் அவை 2023-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது.
பொதுவாக பொருளாதாரத்தை சீரமைக்கவும் பணப்புழக்கத்தில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அவ்வப்போது ஆர்பிஐ இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும். ஆனாலும் இன்னும் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை திருப்பி டெபாசிட் செய்யாமல் உள்ளனர். ஆர்பிஐ தகவல் படி இன்னும் 2 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் இந்திய மக்களிடம் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications