ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சனிக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளில் 98.18 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாகவும், 6,471 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டின் மே 19-ஆம் தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வாங்கி அறிவித்த மே 19-ஆம் தேதி அன்று மொத்தமாக ரூ.3.56 லட்சம் கோடி தொகை புழக்கத்தில் இருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி இந்தத் தொகை 6,471 கோடியாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தபோது, 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் 7ஆம் தேதி வரையில் அனைத்து வங்கி கிளைகளிலும் டெபாசிட் செய்யலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது.

இன்னமும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி உள்ளது. அப்படி இல்லை என்றாலும் நீங்கள் தபால் நிலையங்கள் மூலமாகவும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம்.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பணத் தேவை விரைவாக பூர்த்தி செய்யும் விதமாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு அவற்றின் தேவையும் குறையத் தொடங்கியது. மறுபுறம் 2000 ரூபாய் நோட்டுகள் அன்றாட பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாமலும், அதிக மதிப்பு கொண்டதாகவும் இருந்ததால் கள்ள நோட்டுகள் மற்றும் பதுக்களுக்கும் வாய்ப்பாக மாறியது. இதனால் அவை 2023-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது.
பொதுவாக பொருளாதாரத்தை சீரமைக்கவும் பணப்புழக்கத்தில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அவ்வப்போது ஆர்பிஐ இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும். ஆனாலும் இன்னும் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை திருப்பி டெபாசிட் செய்யாமல் உள்ளனர். ஆர்பிஐ தகவல் படி இன்னும் 2 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் இந்திய மக்களிடம் உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications