ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி எடுக்கப் போகும் முக்கிய முடிவு..!!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின் (MPC) 3 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகள் மீது 50% வரிகளை விதித்துள்ள சூழ்நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவு அக்டோபர் 1ஆம் தேதியான புதன்கிழமை அன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.ஐ. ஆய்வு அறிக்கை ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதே ரிசர்வ் வங்கிக்கு உள்ள சிறந்த சாத்தியமான வழி என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், பிற பொருளாதார நிபுணர்கள் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தில் "தற்போதைய நிலையையே" நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி எடுக்கப் போகும் முக்கிய முடிவு..!!

சில்லறைப் பணவீக்கத்தின் அடிப்படையில் (CPI) கடந்த பிப்ரவரி முதல் 3 தவணைகளில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. ஆனாலும், ஆகஸ்ட் மாத கொள்கை முடிவில், அமெரிக்க வரிகள் மற்றும் புவிசார் அரசியல் விளைவுகளை மதிப்பிடுவதற்காக நிலையை மாற்றாமல் காத்திருப்பு அணுகுமுறையைப் பின்பற்றியது.

ரிசர்வ் வங்கி ஆய்வின்படி, சில்லறை பணவீக்கம் அடுத்த நிதியாண்டிலும் கட்டுக்குள் இருக்கும் என்பதால், ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தை குறைப்பதற்கான நியாயம் மற்றும் அடிப்படை உள்ளது. கிரிசில் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷியும் இந்த மாதமே விகித குறைப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜி.எஸ்.டி. விகிதங்களை சீரமைத்தது பணவீக்கத்தை மேலும் குறைக்க உதவும். மேலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, இந்த ஆண்டு மேலும் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளதால், ஆர்.பி.ஐ.க்கு சில சலுகைகள் கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி மற்றும் வளர்ச்சி : பொருளாதார நிபுணர்கள் பலர் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், "ஜி.எஸ்.டி. 2.0-க்கு முன்னும் பின்னும் பணவீக்கம் இலக்கான 4 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது.

எனவே, இது முதன்மை கருத்தாக இருக்க முடியாது. மேலும், வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வரிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டாலும், வளர்ச்சிக்கு உடனடியாக அச்சுறுத்தல் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், அவர் தற்போதைய நிலையையே எதிர்பார்க்கிறார்.

அதேபோல், ICRA தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், "ஜி.எஸ்.டி. சீரமைப்பு Q3 FY2026 முதல் Q2 FY2027 வரையிலான காலகட்டத்தில் சிபிஐ பணவீக்கத்தை 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த கொள்கை மாற்றம் வலுவான தேவையை தூண்டக்கூடும் என்பதால், அக்டோபர் 2025 நிதிக் கொள்கை மறு ஆய்விலும் ரெப்போ விகிதத்தில் நிலையான நிலைப்பாடு தொடரவே அதிக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்.பி.எம். வங்கித் தலைவர் மண்டார் பிடாலே கூறுகையில், சி.ஆர்.ஆர். குறைப்பின் முழுத் தாக்கம் வெளிப்படும் வரை ஆர்.பி.ஐ. தற்போதைய நிலையை கடைப்பிடிக்கலாம் என்றும், டிசம்பர் கூட்டத்தில் மட்டுமே விகிதக் குறைப்புக்கான சிறிய வாய்ப்பு இருப்பதாகவும் நம்புகிறார்.

ஆகையால், புதிய ஜி.எஸ்.டி. 2.0-இன் தாக்கம் பணவீக்கத்தை குறைத்திருந்தாலும், அமெரிக்க வரிகள் மற்றும் சந்தை ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த முறையில் நிதானமான முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+