மாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு

மாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது இந்திய வாடிக்கையாளர்களின் டேட்டா-வை இந்தியாவில் மட்டும் தான் சேமிக்க வேண்டும் என அரசு விதித்த உத்தரவை மாஸ்டர்கார்ட் நிறுவனம் பின்பற்றவில்லை.

மாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு

இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கி நேற்று மாஸ்ட்ர்கார்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் ஜூலை 22ஆம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை உத்தரவை விடுத்துள்ளது. மாஸ்டர்கார்ட் நிறுவனத்திற்குப் போதிய அவகாசம், வாய்ப்புகள் கொடுத்த பின்பும் அரசு விதிகளை மதிக்காத காரணத்தால் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

இதனால் வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு...?!

வங்கிகளுக்கு என்ன பாதிப்பு..?!

இந்தியாவில் மாஸ்டர்கார்ட் நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆர்பிஎல் வங்கி எனப் பல வங்கிகளிடம் கூட்டணி வைத்துள்ளது. இந்தத் தடை உத்தரவால் இனி வங்கிகள் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் அளிக்க முடியாது.

மக்களுக்கு என்ன பாதிப்பு..?

இந்தியாவின் மொத்த கார்டு பேமெண்ட் சேவையில் சுமார் 30 சதவீதம் மாஸ்டர்கார்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் படி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பழைய வாடிக்கையாளர்கள் எவ்விதமான பிரச்சனையுமின்றி டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.

ஆர்பிஐ
முதல் முறை அல்ல..

ரிசர்வ் வங்கி இதுபோல் தடை விதிப்பது இது முதல் முறை அல்ல, மே 1ஆம் தேதி அமெரிக்க எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் போன்ற நிறுவனத்திற்கும் இதேபோன்ற கட்டுப்பாட்டை விதித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+