இந்திய ரிசர்வ் வங்கி கிளீன் கரன்சி நோட்டு பாலிசி கீழ் மே 19-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்து செப்டம்பர் 30 வரையில் கால அவகாசம் கொடுத்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 93% 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி என தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, ஆகஸ்ட் 31, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 ரூபாய் நோட்டுகள் ரூ.0.24 லட்சம் கோடி மட்டுமே.

இதனால், மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2000 ரூபாய் நோட்டுகளில் 93% திரும்பி வந்துவிட்டன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000 ரூபாய்களை ஆர்பிஐ பழைய 1000 மற்றும் 500 ரூபாய் போல் அல்லாமல் திட்டமிட்டு திரும்ப பெற்றதால் மக்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் பணத்தை மாற்றியுள்ளனர்.
மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில் 87% டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13% பிற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டதாக வங்கிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் கூடுதல் நிதி புழக்கம் உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி 2023 ஆம் ஆண்டின் மே 19 ஆம் தேதி புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது, இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த சில மணிநேரத்திற்கு மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையில் உருவானாலும், பெரும்பாலான மக்கள் கையில் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டு இல்லாத காரணத்தாலும், போதுமான கால அவகாசம் இருந்த காரணத்தாலும் மக்கள் மத்தியிலான பதற்றம் குறைந்துள்ளது.
மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடியாக இருந்தது. மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது ரூ.3.56 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. தற்போது வெறும் ரூ.24,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டு மட்டுமே புழக்கத்தில் உள்ளது. செப்டம்பர் 30, 2023 வரை மீதமுள்ள காலத்தை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications