மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் சுமார் 97.38 சதவீத வங்கி அமைப்பிற்குள் திரும்பி விட்டன. மக்கள் வசம் இன்னும் ரூ.9330 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் உள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 மே 19 ஆம் தேதியன்று புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளைத் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அன்றைய தினம் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும். அது இப்போது ரூ.9330 கோடியாகக் குறைந்துவிட்டது.

ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள ரூ.2000 நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளில் அவற்றை டெபாசிட் செய்யலாம் அல்லது பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இத்துடன் இந்தியா போஸ்ட் மூலம் ரிசர்வ் வங்கிக் கிளைகளுக்கு தபால் மூலமும் அனுப்பி தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களோ அல்லது நிறுவனங்களோ செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யவோ அல்லது பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கான அவகாசம் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கிகளில் மாற்றுவது அல்லது டெபாசிட் செய்யும் வசதி ரத்து செய்யப்பட்டது.
அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அந்த 2000 ரூபாய் நோட்டை நாட்டில் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளை அலுவலகத்தில் நேரடியாக மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்ததால் இப்போது கூடுதலாக இந்தியா போஸ்ட் மூலம் தபாலில் அனுப்பும வசதியை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
ஆமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டீகர், சென்னை, குவாஹட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வங்கி நோட்டுகளில் டெபாசிட் செய்யவோ/மாற்றவோ செய்யலாம்.
பழைய 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்த நிலையில் புதிய 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து அதைத் திரும்பப் பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட ரூ.3.65 மதிப்பிலான 2000 நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டிருந்தது. இப்போது அதில் 97.38 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டன. மக்கள் வசம் வெறும் ரூ.9330 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications