இந்திய ரிசர்வ் வங்கி திங்களன்று, ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாகவும், ரூ.8,202 கோடி மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் மாத வர்த்தக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது.

மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால், அன்றைய நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன.
நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் ரூ.2,000 வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம். மக்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்காக, எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் மூலம் ரூ.2,000 வங்கி நோட்டுகளை அனுப்பலாம்.
அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், செப்டம்பர் 30, 2023க்குள் அவற்றை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவோ முதலில் கேட்கப்பட்டது. காலக்கெடு பின்னர் அக்டோபர் 7, 2023 வரை நீட்டிக்கப்பட்டது.
வங்கிக் கிளைகளில் டெபாசிட் மற்றும் பரிமாற்றச் சேவைகள் அக்டோபர் 7, 2023 அன்று நிறுத்தப்பட்டன. அக்டோபர் 8, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில், தனிநபர்கள் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கு சமமான தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கலாம்.
அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டீகர், சென்னை, குவாஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வங்கி நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்/மாற்றப்படுகின்றன.
2016 நவம்பரில், அப்போது நடைமுறையில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications