வங்கிகள் மீது 58% புகார்.. நிதி நிறுவனங்கள் மீது 387% அதிகரிப்பு.. ரிசர்வ் வங்கி அறிக்கை பளிச்..!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையில், வங்கி குறை தீர்பாயத்திடம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தின் மீதான புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வங்கிகளுக்கு எதிரான புகார்கள் 58% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Array

Array

2019 - 20ம் நிதியாண்டில் வங்கி மீது 3,08,630 புகார்களாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,95,901 புகார்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே வங்கி அல்லாத நிறுவனங்கள் மீதான புகார்கள் 2019 - 20ம் நிதியாண்டில் 387% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி குறை தீர்பாயத்திற்கு (Ombudman) இந்த நிதியாண்டில் 19,432 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் வெறும் 3,991 புகார்கள் மட்டுமே வந்திருந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. .

டிஜிட்டல் மீதான பரிவர்த்தனை

டிஜிட்டல் மீதான பரிவர்த்தனை

இந்த புகார்களில் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான புகார்களாக இருந்ததாக ஒம்பட்ஸ்மேன் கூறியுள்ளது. இது பெறப்பட்ட மொத்த புகார்களில் 44.66% பங்கு வகித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் வங்கிகள் மீதான புகார்கள் அதிகரித்திருந்த நிலையில், தற்போது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் மீதான புகார்கள் அதிகரித்துள்ளன.

வங்கிகள் மீது புகார்

வங்கிகள் மீது புகார்

குறிப்பாக வங்கிகளில் மிகப்பெரிய முன்னணி வங்கிகள் மீதே அதிக புகார்கள் இருந்தன. இதில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீது தான் 48,333 புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து தனியார் துறையை சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி மீது 15,004 புகார்களும், ஐசிஐசிஐ வங்கி மீது 11,844 புகார்களும், இதே ஆக்ஸிஸ் வங்கி மீது 10,457 புகார்களும், இதே பஞ்சாப் நேஷனல் வங்கி மீது 9,928 புகார்களும் வந்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ மீது புகார்

எஸ்பிஐ மீது புகார்

இதில் மொத்த புகார்களில் எஸ்பிஐ மீது 2018 - 19ம் ஆண்டில் 61.90% புகார்கள் இருந்த நிலையில், 2019 - 20ம் வருடத்தில் 59.65% வந்துள்ளது. இதே மொத்த புகார்களில் தனியார் வங்கிகள் மீதான புகார்கள் 28.04%ல் இருந்து 31.96% ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மீதும் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் FBC பின்பற்றாதது தான் (32.29% புகார்கள்) என்றும், இதே ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாதது என்று 18.565 புகார்களும் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

வங்கி அல்லாத நிதி நிறுவனம் மீது புகார்

வங்கி அல்லாத நிதி நிறுவனம் மீது புகார்

இதே வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்திற்கு எதிராக 4979 புகார்கள் வந்துள்ளதாகவும், இதே 1968 புகார்கள் பராமரிக்கதக்கவை என்றும் கூறியுள்ளது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியாபுல்ஸ் கன்சியூமர் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது 300 புகார்களும், இதனை தொடர்ந்து HDB பைனான்ஷியல் லிமிடெட் நிறுவனத்தின் மீது 252 புகார்களும், டாடா கேப்பிட்டல் பைனான்ஷியல் நிறுவனத்தின் மீது 217 புகார்களும் வந்துள்ளன. இதே புல்லர்டன் இந்தியா கிரெடிட் கம்பெனி லிமிடெட் மீது 235 புகார்களும் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+