இந்தியப் பொருளாதாரம், காகிதப் பணத்தைப் பயன்படுத்தும் முறையை விட்டுவிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி மிக வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் அடுத்த கட்டமாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது 'டிஜிட்டல் ரூபாய்' திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் காகிதப் பணத்தின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அப்படியே இருக்கும். ஆனால், பணம் மட்டும் டிஜிட்டல் வடிவில் இருக்கும். இதுவே மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC) ஆகும்.
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன..? ஏன் முக்கியம்..?: டிஜிட்டல் ரூபாய் என்பது, இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வமான 'டிஜிட்டல் பணம்'. இது நேரடியான பணம், இதை வெளியிடுவதும் கட்டுப்படுத்துவதும் ரிசர்வ் வங்கிதான். நாம் பொதுவாகப் பயன்படுத்தும் UPI பரிவர்த்தனைகள், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்ற மட்டுமே உதவுகின்றன.

ஆனால், டிஜிட்டல் ரூபாய் அப்படி அல்ல. இதுவே நேரடியான பணம் என்பதால், காகிதப் பணத்திற்கு சமமான மதிப்பை இது கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய், ஆன்லைன் பேமெண்ட்டின் வேகத்தையும், அரசு உத்தரவாதத்துடன் கூடிய பணத்தின் நம்பகத்தன்மையையும் இணைத்து, மக்களுக்குப் பாதுகாப்பான புதிய மாற்று வழியை வழங்குகிறது.
UPI-யை விட சிறந்ததா..?:டிஜிட்டல் ரூபாய்க்கும் UPI-க்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அதன் செயல்பாட்டில்தான் உள்ளது.
UPI: நீங்கள் யாருக்காவது யுபிஐ மூலம் பணம் அனுப்பினால், அந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு செல்கிறது. அதாவது, பரிவர்த்தனை எப்போதும் வங்கிகள் வழியாகத்தான் நடக்கும்.
டிஜிட்டல் ரூபாய்: ஆனால், டிஜிட்டல் ரூபாய் அப்படி இல்லை. இது ஒரு தனிப்பட்ட டிஜிட்டல் பணம். இதன் மூலம், வங்கிகள் வழியாக செல்லாமல், இரண்டு நபர்களுக்கும் இடையே நேரடியாகப் பணத்தை அனுப்ப முடியும். இது கிட்டத்தட்ட, காகித பணத்தை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொடுப்பது போலத்தான். இந்த நேரடிப் பரிவர்த்தனை, மூன்றாம் தரப்புச் செயலிகள் அல்லது நெட்வொர்க்குகளை சார்ந்து இருப்பதை குறைக்கிறது. மேலும், காகிதப் பணத்தை பயன்படுத்துவது போல, தனியுரிமை இதில் இருக்கும்.
வாலட்டில் பதிவு செய்வது எப்படி..?: டிஜிட்டல் ரூபாய் வாலட்டில் பதிவு செய்வது மிகவும் எளிமையானது. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்து, ஒருமுறை உங்கள் அடையாள ஆவணங்களைக் கொடுத்து (KYC) சரிபார்த்தால் போதும். அதன் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து டிஜிட்டல் ரூபாயை வாலட்டில் ஏற்றிக் கொள்ளலாம். வணிகர்களுக்குப் பணம் கொடுக்க அல்லது நண்பர்களுக்கு அனுப்ப இந்த டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்.
எதிர்காலப் பயன்கள் என்ன..?: டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டால், காகிதப் பணத்தை அச்சிடுவது மற்றும் நிர்வகிப்பதற்கான செலவு குறையும். மேலும், வங்கிக் கணக்கே இல்லாதவர்கள் கூட ஸ்மார்ட்போன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்த முடியும் என்பதால், நிதிச் சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும். இப்போதைக்கு, டிஜிட்டல் ரூபாய் என்பது காகிதப் பணத்தை நீக்குவதற்காக வரவில்லை. அதற்குத் துணையாக இருக்கவே வந்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் யுகத்தில் பணம் பயன்படுத்தப்படும் விதமே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications