அதிகமா பர்சனல் லோன் வாங்குவோருக்கு செக் வைத்த ஆர்பிஐ..! இனி கடன் வாங்குவதற்குள் நாக்கு தள்ளிடும்..!!

நாட்டில் பொதுவாக கடன் வாங்குவது என்பது அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. ஒருபுறம் வங்கிகள் கடன் கொடுத்தாலும் அவற்றை திரும்ப வாங்குவதிலும் கறாராக உள்ளன. தனிநபர் கடன் வாங்குவது என்பது அனைவருக்கும் ஒரு சில காலகட்டங்களில் தேவைப்படலாம். ஆனால் அதை தேவை இருக்கும்போது எடுத்து சரிவர திருப்பி செலுத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் ஒருசிலரோ கிடைக்கும்போது அதிக கடனை எடுத்து திருப்ப செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு செக் வைக்கும் விதமாக தற்போது ரிசர்வ் வங்கி ஒரு நடவடிக்கையை கொண்டுவர உள்ளது.

இந்த நிலையில் தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி புதுப்பிக்கப்பட்ட கடன் அறிக்கை விதியை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையானது, கடன் வாங்கியோர் செயல்பாடுகளை கடுமையாக கண்காணிப்பதை கொண்டுவருகிறது. அதன்படி, கடன் வழங்குபவர்கள் ஒரு தனிநபரின் நிதிக் கடப்பாடுகள் குறித்த துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. அந்தவகையில் புதிய கடன் அறிக்கை மாற்றத்தை 15 நாட்களுக்குக் குறைப்பதன் மூலம், ஒரே நேரத்தில் பல கடன்களின் நிகழ்வுகளைக் குறைத்து, பொறுப்பான கடன்களை மேம்படுத்துவதை ஆர்பிஐ நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதிகமா பர்சனல் லோன் வாங்குவோருக்கு செக் வைத்த ஆர்பிஐ..! இனி கடன் வாங்குவதற்குள் நாக்கு தள்ளிடும்..!!

தனிநபர் கடனுக்கான கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் தனிநபர்கள் ஒரே நேரத்தில் பல கடன்களை எடுப்பது கடினமாகிறது. ஜனவரி 1 முதல், கடன் கொடுப்பவர்கள் முந்தைய ஒரு மாத இடைவெளிக்குப் பதிலாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் கடன் வாங்குபவரின் செயல்பாட்டைக் கிரெடிட் பீரோக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதன்மூலம் தனிநபர் கடன் வாங்குவோர்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் அதிக கடன் வாங்கும் அபாயத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கடி புதுப்பித்தல்கள் மூலம், கடன் வாங்குபவர்கள் தங்கள் திருப்பிச் செலுத்தும் திறனைத் தாண்டி பல கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளுக்கு பல்வேறு ஆய்வுகளை வங்கிகளிடமிருந்து பெறுவார்கள். எனவே அதிக கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படவுள்ளது.

இதற்கிடையில், இதுபோன்ற அபாயங்களைக் குறைக்க குறுகிய நாட்களில் கடன் அறிக்கை வெளியிடும் நடைமுறையை ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது. மாற்றங்களைச் செயல்படுத்த கடன் வழங்குபவர்கள் மற்றும் கிரெடிட் பீரோக்கள் புத்தாண்டு வரை அவகாசம் அளித்தது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த குறுகிய கடன் அறிக்கை சுழற்சியானது கடன் வாங்குபவர்களின் அபாயத்தை திறம்பட மதிப்பிடும் திறனை மேம்படுத்தும் என்றும் அதிக கடன் வாங்குவோரை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+