ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
இதனால் இன்று ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை முடிவில் வட்டி உயர்வுக்கு 50:50 சான்ஸ் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரெப்போ விகிதம் உயர்ந்துள்ளது.
இதனுடன் ஆர்பிஐ 2 முக்கியமான திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.
பணப் புழக்கம்
இந்தியாவில் பணப் புழக்கத்தை மேம்படுத்த ஆர்பிஐ பல முயற்சிகளைச் செய்து வரும் வேலையில், தற்போது மக்கள் மத்தியில் இருக்கும் நாணயம் அதாவது சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
யுபிஐ சேவை
இந்தியா முழுவதும் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் வேளையில் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு வரலாற்று முதல் முறையாகச் சில மாதங்களுக்குக் குறைந்தது. பணம் தான் எப்போது கிங் ஆக இருந்தாலும், நாளிடைவில் இது கட்டாயம் மாறும்.
சில்லறை காசு தட்டுப்பாடு
இந்த நிலையில் மக்கள் மத்தியில் இருக்கும் சில்லறை காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க ஆர்பிஐ நாட்டின் 12 நகரங்களில் நாணயங்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் காயின் வென்டிங் மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பைலட் திட்டம்
இந்தக் காயின் வென்டிங் மெஷின்களின் அறிமுகம் ஒரு பைலட் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, இதில் முயற்சியில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்து இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை போலவே இயங்கும் இந்தக் காயின் வென்டிங் மெஷின்.
QR Code வசதி
காயின் வென்டிங் மெஷின்களைப் பயன்படுத்த ஏடிஎம் கார்டு அல்லாமல் QR Code வாயிலாக மக்கள் சில்லறை காசுகளைப் பெற முடியும். அதாவது நீங்கள் தேர்வு செய்யும் தொகைக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டு அதற்கான சில்லறை காசுகள் அளிக்கப்படும் என ஆர்பிஐ கவர்னர் அறிவித்தார்.
ரெப்போ விகிதம்
ஆர்பிஐ கவர்னர் இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கடனுக்கான வட்டி விகிதம்
இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஆர்பிஐ கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்பரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும். வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கட்டாயம் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
6 முறை வட்டி உயர்வு
மே 2022ல் இருந்து 6 முறை வட்டியை உயர்த்தியது ஆர்பிஐ , இந்த
நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த 6 பேரில் 4 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் இக்கூட்டத்தில் SDF விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்வு, MSF விகிதம் 6.75 சதவீதமாக உயர்வு, ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீத உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications