ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் சிக்னேச்சருடன் கூடிய 50 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறது. சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் பேங்க்கின் 26-வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸுக்குப் பிறகு, டிசம்பர் 2024-ஆம் ஆண்டு ஆர்பிஐ-இன் புதிய கவர்னராக பொறுப்பேற்றார்.
இந்தியாவின் பணவியல் அமைப்பின் தொடர்ச்சியான போக்கை உறுதி செய்வதற்காக புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கப்படவுள்ளது. அப்படியானால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என்ற கேள்வி எழலாம். முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

புதிதாக அச்சிடப்பட்டுள்ள 50 ரூபாய் நோட்டுகளில் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன?: பாதுகாப்பை மேம்படுத்தவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி நியூ சீரிஸ்-இன் கீழ் புதிய 50 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே உள்ள வடிவமைப்பிலேயே தொடர்ந்து அச்சிடப்பட உள்ளது. நோட்டின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், பின்புறத்தில் கலாச்சார கருத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும்.
வேறு என்ன மாற்றங்கள்?: தற்போது புதிதாக பதவியேற்றுள்ள கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் புதுப்பிக்கப்பட்ட சிக்னேச்சர் மட்டுமே ஒரே மாற்றம். வேறு எந்த வடிவமைப்பு மாற்றங்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பழைய ரூ.50 நோட்டுகள் செல்லுபடியாகுமா?: அனைத்து பழைய 50 ரூபாய் நோட்டுகளும் இன்னும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய நோட்டுகள் வெளியிடப்பட்ட பிறகும், முந்தைய ஆளுநர்களால் கையொப்பமிடப்பட்ட பழையவை பயன்பாட்டில் இருக்கும். இது பொதுமக்களுக்கோ அல்லது வணிகங்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்கிறது.
ஏன் புதிய நோட்டுகள் வெளியிடப்படுகிறது?: ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பதை மாற்றுவது ரிசர்வ் வங்கியின் பொதுவான நடைமுறையாகும். புதிய ஆளுநர் பதவியேற்கும் போது அவரின் கையொப்பமிட்ட புதிய நோட்டுகள் வெளியிடப்படும். அதே வேளையில் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். உதாரணமாக உர்ஜித் படேல் கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதேநேரம் Y.V. ரெட்டி போட்ட கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகள் 2004.ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதேபோல தான் தற்போது சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications