ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு வெள்ளிக்கிழமை அதன் நிதி மேலாண்மை வாயிலாக கிடைத்த 87,416 கோடி ரூபாய் அளவிலான உபரி தொகையை டிவிடென்ட் ஆக மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஆர்பிஐ தனது contingency risk buffer அளவீட்டை தற்போது இருக்கும் 5.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி 2022 ஆம் நிதியாண்டில் 30,307 கோடியை மத்திய அரசுக்கு உபரி நிதியாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆர்பிஐ நிர்வாக குழு ஏப்ரல் 2022 - மார்ச் 2023 காலக்கட்டத்திற்கான ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்த பின்பு, 2022-23 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமை மற்றும் தற்போதைய geopolitical பிரச்சனைகள் இந்திய பொருளாதாரம் மீது எவ்விதமான பாதிப்பை கொண்டு உள்ளது என்பதை ஆலோசனை செய்தது.

இந்தியாவின் பென்ச்மார்க் 10 ஆண்டு பத்திர வருவாய் 5 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.05 சதவீதம் உயர்ந்து 7.01% ஆக இருந்தது. இந்த உயர்வுக்கு முக்கியமான காரணம் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 1 - 1.5 லட்சம் கோடி ரூபாயை பத்திர சந்தையில் முதலீடு செய்துள்ளது தான்.
ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்த காரணத்தால் இந்த வருடம் அதிகப்படியான உபரி நிதியை மத்திய அரசு பெறும் என கணிக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் ஆர்பிஐ ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த அதிகப்படியான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தில் ஈடுப்பட்டது, இதேபோல் உள்நாட்டு வங்கி அமைப்பில் அதிகப்படியான நிதி உட்செலுத்தப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications