இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி பிப்ரவரி 25ஆம் தேதி சிறப்பு வர்த்தகத்தின் கீழ் அரசு பத்திரங்களை ஓரே நேரத்தில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ரிசர்வ் வங்கி குறித்த நாளில் ஓபன் மார்கெட் ஆப்ரேஷன்ஸ் என்ற சிறப்பு வர்த்தகத்தின் கீழ் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது.

நாட்டின் தற்போதைய பணப் புழக்க அளவீடுகள் மற்றும் நிதியியல் நிலையைக் கருத்தில் இந்தியாவின் முதலீட்டுச் சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஓபன் மார்கெட் ஆப்ரேஷன்ஸ் கீழ் ஓரே நேரத்தில் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை வாங்கவும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்புக் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. இந்தப் பாதிப்பில் சில நிதியியல் சந்தை கடுமையான நிதி நெருக்கடி, வர்த்தகப் பாதிப்பு, வருமானம் வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதைச் சரி செய்யும் நோக்கில் தான் தற்போது ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதே நேரத்தில் மத்திய அரசு 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சிக்காகச் சுமார் 12.06 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை கடனாகப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மற்றும் முதலீட்டு ஈர்க்கும் திட்டங்கள் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications