சென்னை: அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் பண பரிவர்த்தனை மற்றும் பண பரிமாற்றம் போன்றவற்றிற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் பயன்பாடும் அதிகமாகிவிட்டது. இதனால் அதில் தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து விட்டன. இதனைத் தடுக்கும் விதமாக RBI சில புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது,
இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தினை சாதகமாக்கி பல மோசடிகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த மாதிரியான பிரச்சனைகளை சரி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல முயற்சிகளையும் செய்து வருகிறது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் தகவல்களை வைத்திருத்தல் தொடர்பான விதி 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண பரிவர்த்தனையின் பொழுது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பணம் செலுத்தும் நிறுவனங்கள் சேமித்து வைக்காமல் இருக்க இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றம் செய்யும் போது ஏதுவான வகையில் செயல்முறைகளை எளிதாக்க உள்ளது.
நடைமுறைப்படுத்தப் போகும் புதிய விதிகளின்படி எந்த ஒரு பணம் செலுத்தும் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டின் தகவல்களை சேமித்து வைக்க முடியாது. அதற்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமானது அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது, என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு அமல்படுத்தப்படும் விதியின்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் அந்தக் கார்டை வைத்திருப்பவர் மற்றும் நெட்வொர்க் ஆகியோரால் மட்டுமே அறிந்திருக்கப்படும்.
இந்த விதிமுறைகள் யாவும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் இதற்கான திட்டமிடல் நிறைவு செய்யப்பட்டு விட்டது. பொதுமக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகளோ ஆட்சேபனைகளோ மாற்று கருத்துக்களோ ஏதேனும் இருப்பின் இந்திய ரிசர்வ் வங்கி அவற்றினை வரவேற்கிறது.
வரவேற்கப்பட்ட பரிந்துரைகள் யாவும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இதற்கான செயல் திட்டமானது நிறைவேற்றப்படும். ஏற்கனவே அறிவித்தபடி இந்திய ரிசர்வ் வங்கி அதன் கோட்பாடுகளை அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வரும் என அறிவிப்பு வெளியான நிலையில், இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.
பல்வேறு வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட இணையவழி பண பரிமாற்றம் மற்றும் பண பரிவர்த்தனையின் பொழுது சிக்கல்களும் பல மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய சிக்கலான சூழ்நிலை இருந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்தவும் நுகர்வோர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் அவசியம் ஏற்படாமல் இருக்கவும் இந்த இணையவழி பண பரிமாற்றத்தை விரும்புகின்றனர்.
அவசர தேவைகளுக்கு வங்கிகளில் வரிசையில் நிற்க முடியாத பலருக்கும் இந்த ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழி எளிதாகவும் அவசியமாகவும் இருக்கிறது. எனினும் இதில் நிகழும் பல மோசடிகளால் பாதுகாப்பு இல்லாத தன்மையே நிலவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் விதமாக மேற்கண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications