புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!

சென்னை: அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில் பண பரிவர்த்தனை மற்றும் பண பரிமாற்றம் போன்றவற்றிற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் பயன்பாடும் அதிகமாகிவிட்டது. இதனால் அதில் தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து விட்டன. இதனைத் தடுக்கும் விதமாக RBI சில புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது,

இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தினை சாதகமாக்கி பல மோசடிகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த மாதிரியான பிரச்சனைகளை சரி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல முயற்சிகளையும் செய்து வருகிறது.

புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் தகவல்களை வைத்திருத்தல் தொடர்பான விதி 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண பரிவர்த்தனையின் பொழுது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பணம் செலுத்தும் நிறுவனங்கள் சேமித்து வைக்காமல் இருக்க இந்திய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றம் செய்யும் போது ஏதுவான வகையில் செயல்முறைகளை எளிதாக்க உள்ளது.

நடைமுறைப்படுத்தப் போகும் புதிய விதிகளின்படி எந்த ஒரு பணம் செலுத்தும் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டின் தகவல்களை சேமித்து வைக்க முடியாது. அதற்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமானது அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது, என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருகின்ற 2025 ஆம் ஆண்டு அமல்படுத்தப்படும் விதியின்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் அந்தக் கார்டை வைத்திருப்பவர் மற்றும் நெட்வொர்க் ஆகியோரால் மட்டுமே அறிந்திருக்கப்படும்.

இந்த விதிமுறைகள் யாவும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் இதற்கான திட்டமிடல் நிறைவு செய்யப்பட்டு விட்டது. பொதுமக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகளோ ஆட்சேபனைகளோ மாற்று கருத்துக்களோ ஏதேனும் இருப்பின் இந்திய ரிசர்வ் வங்கி அவற்றினை வரவேற்கிறது.

வரவேற்கப்பட்ட பரிந்துரைகள் யாவும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இதற்கான செயல் திட்டமானது நிறைவேற்றப்படும். ஏற்கனவே அறிவித்தபடி இந்திய ரிசர்வ் வங்கி அதன் கோட்பாடுகளை அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வரும் என அறிவிப்பு வெளியான நிலையில், இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.

பல்வேறு வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தாலும் கூட இணையவழி பண பரிமாற்றம் மற்றும் பண பரிவர்த்தனையின் பொழுது சிக்கல்களும் பல மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய சிக்கலான சூழ்நிலை இருந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்தவும் நுகர்வோர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் அவசியம் ஏற்படாமல் இருக்கவும் இந்த இணையவழி பண பரிமாற்றத்தை விரும்புகின்றனர்.

அவசர தேவைகளுக்கு வங்கிகளில் வரிசையில் நிற்க முடியாத பலருக்கும் இந்த ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழி எளிதாகவும் அவசியமாகவும் இருக்கிறது. எனினும் இதில் நிகழும் பல மோசடிகளால் பாதுகாப்பு இல்லாத தன்மையே நிலவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் விதமாக மேற்கண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+