எப்படியாவது கஷ்டப்பட்டு நன்றாகப் படித்து ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆகி தனது சொந்த மாவட்டத்தில் கலெக்டராகப் பெருமையுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற நினைப்புடன் ஏராளமானவர்கள் உள்ளனர்.
UPSC தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு படிக்க வேண்டும். அதில் வெற்றி பெற பிரிலிமினரி, மெயின்ஸ், இண்டர்வியூ என்ற மூன்று நிலைகளைத் தாண்ட வேண்டும். இருப்பினும் இந்த சிவில் சர்வீஸ் வேலைகளை உதறித் தள்ளிவிட்டு எத்தனையோ பேர் பல நிறுவனங்களுக்குத் தலைவர்களாகச் சென்று பதவி வகிக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒருவர் தான் ஆர்சி பார்கவா, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர். அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவரது பேட்ச்சில் அவர் தான் முதலாவது நபர். 1956 இல் அவர் ஐஏஎஸ் பதவியை பெற்றார்.
சுமார் 25 வருடம் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு 1981 ஆம் ஆண்டு RC Bhargava மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநராக சேர்ந்தார். அதன்பின்னர் அவர் அந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் தலைவராக கடந்த 2007 ஆம் ஆண்டில் பதவி ஏற்றார். கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதிப்படி அந்த நிறுவனத்தின் மார்க்கெட் மூலதனம் ரூ.2,90,000 கோடியாகும். அதன் பங்கு மதிப்பு ரூ.9,622.30 ஆகும்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் பார்கவா முதுநிலை பட்டம் படித்தார். வில்லியம்ஸ் கல்லூரியில் அவர் மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் இன் டெவலப்மென்ட் எக்கனாமிக்ஸ் பட்டம் முடித்தார். அவர் டூன் ஸ்கூலில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
ஐஏஎஸ் பணியில் நீண்டகாலம் பணியாற்றிய பிறகு அவர் 1981 ஆம் ஆண்டில் மாருதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கமர்ஷியல் பிரிவில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக மத்திய எனர்ஜி அமைச்சகத்தில் இந்திய அரசின் இணை செயலராக 1974-77 காலகட்டத்தில் பணியாற்றினார்.
1977-78 காலகட்டத்தில் இந்திய அரசின் கேபினட் செக்ரடேரியேட்டில் இணை செயலராகவும் இருந்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் பட்டம் வழங்கப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications