இந்தியாவின் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருக்கக் கூடிய ஒரு விளையாட்டு போட்டி தான் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள். இதில் நடப்பு சாம்பியன் ஆக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது. இந்த அணி கடந்த ஆண்டு தான் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தற்போது ஆர்சிபி அணி உரிமையாளராக பிரிட்டனை சேர்ந்த பிரபல நிறுவனமான டிடாஜியோவின் இந்திய பிரிவான யுனைடெட் லிமிடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விற்பனை செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய ஐபிஎல் அணிகளிலேயே அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட ஆர்சிபி அணியை வாங்குவதற்கு பல்வேறு நபர்கள் மத்தியில் கடுமையான போட்டி காணப்பட்டது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு மார்ச் 16ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனவல்லா , மணிப்பால் குழுமத்தின் தலைவர் ரஞ்சன்பாய், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஈக்விட்டி என்ற நிறுவனம் உட்பட 10 பேர் போட்டி போட்டனர். வரும் 28ஆம் தேதியிலிருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்குள் ஆர்சிபி அணியின் புதிய முதலாளியை முடிவு செய்து விட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்களாம்.
அந்த வகையில் ஆர்சிபி அணியை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்கும் போட்டியில் இருந்து அடல் பூனவல்லா விலகி விட்டார். தற்போது இரண்டு பேர் மத்தியில் கடுமையான போட்டி நிலவுவது தெரியவந்திருக்கிறது. ஒன்று மணிப்பால் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரான ரஞ்சன் பாய். அவர் அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்தோடு இணைந்து rcb அணியை வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரியிருக்கிறார்.

அதேபோல ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஈக்விட்டி நிறுவனம் , லிப்ரோ நிறுவனர் அசின் பிரேம்ஜியின் முதலீட்டு அலுவலகமான பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒப்பந்தம் கேட்டுள்ளன. ஆர்சிபி என்ற பிராண்டின் கீழ் இருக்கக்கூடிய மகளிர் ஐபிஎல் அணியும் இந்த ஒப்பந்த மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
தற்போது ஆர்சிபி அணிக்கு உரிமையாளராக இருக்கக்கூடிய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் 2 பில்லியன் டாலர் அதாவது 18,520 கோடி ரூபாய் வரை விலை கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஐபிஎல் -இன் பிரான்ட் வேல்யூ 3.9 பில்லியன் டாலராக இருக்கிறது, இதில் 269 மில்லியன் டாலர்களுடன் ஆர்சிபி தான் முதலிடத்தில் இருக்கிறது, இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இடம் பெற்று இருக்கின்றன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications

