ஆர்டிபி குழுமத்தை சேர்ந்த ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவனம், ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் மற்றும் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் முன்பு ஆர்டிபி ரியாலிட்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்பட பல்வேறு வேகமாக வளர்ந்து நகரங்களில் வலுவான வர்த்தக இருப்பை கொண்டுள்ளது.
ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்நிறுவனம் தனது பங்கின் பங்கு பிரிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கினை முழுவதும் செலுத்தப்பட்ட ரூ.1 முக மதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்க உள்ளது. இதற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு, பங்கு பிரிப்புக்கான பதிவு தேதி அறிவிக்கப்படும் என இந்நிறுவனம் அண்மையில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது, பிப்ரவரி 28ம் தேதியை பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவன பங்கு விலை 258.75 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.1,263.45 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மல்டிபேக்கர் பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 1.638.58 சதவீதம் பெருக்கியுள்ளது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,691.75 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இதே காலத்தில் (5 ஆண்டுகள்) சென்செக்ஸ் 84.06 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வெள்ளி்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.551.65ஆக இருந்தது. 2024 டிசம்பர் 10ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.612.65ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.83.31 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.3.86 கோடி ஈட்டியுள்ளது. 2024 ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளிலும் இந்நிறுவனம் லாபம் சம்பாதித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் எப்போதும் இந்நிறுவன பங்கின் மீது ஒரு பார்வை வைத்துள்ளனர்.
Story written by: Subramanian
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications