ரியல் எஸ்டேட்டா? பங்கு சந்தையா? உங்கள் முதலீடுக்கு எது சிறந்தது?

முதலீடு செய்ய வேண்டுமென்று நினைத்தால் ரியல் எஸ்டேட்டும், பங்குச்சந்தையும் முதலீட்டாளர்களை முதலில் மிரட்டித்தான் எடுத்து விடுகின்றன.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சற்று விவேகமான செயல் என்று நினைக்கும்போது இந்திய பங்கு சந்தைகள் நல்ல லாபத்தை ஈட்டுவதாகவும், பாதுகாப்பானதாகவும், முதலீட்டுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பது போலத் தோன்றும். எனவே உங்களது முதலீட்டுக் கனவை சிறப்பாக நனவாக்க பல்வேறு விருப்பங்கள் பற்றிய விரிவான ஆய்வை செய்யுங்கள்.

ரியல் எஸ்டேட்டா? பங்கு சந்தையா? உங்கள் முதலீடுக்கு எது சிறந்தது?

இந்திய நிதிச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் நிறையவே பரந்து கிடக்கின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகள்தான் முதலீட்டுக்கு சிறந்த தேர்வுகளாக வந்து முன்நிற்கின்றன. இதனால் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் முதலீட்டாளர்களிடம் தோன்றிவிடுகிறது. குறிப்பாக இந்தக் குழப்பம் பங்குச் சந்தைக்குப் புதிதானவர்கள் அல்லது நிதி முதலீடு திட்டமிடுதலில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களாகவே உள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழிலும் பங்குகளும் வெவ்வேறு தேவைகளை நிறைவேற்றக்கூடியவை. உங்களது இலக்கு என்னவென்று முடிவெடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் சிரமமாக இருந்தாலும் வேறு வழியில்லை. ரியல் எஸ்டேட் பாதுகாப்பான முதலீடு போலத் தெரிந்தாலும் சொத்துக்களை விற்கும்போது பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பங்கு சந்தைகள் தரும் பாதுகாப்பு மற்றும் விற்பனை வாய்ப்பு பெரிதாகத் தோன்றும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மிகவும் கடின உழைப்பு தேவைப்படும் துறையாக உள்ளது. இந்தத் துறையில் நிகழும் அண்மைக்கால மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் முதலீடு ஆப்ஷனைத் தொடங்கினாலும் உண்மையான வேலை என்பது நேரடியாக இடத்துக்குச் சென்று கட்டுமானத்தின் தரம், சட்டச்சிக்கல்கள், டெவலப்பர்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சுற்றுப்புற ஆய்வு, கட்டுமானத்துக்கான கால அவகாசம் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.

ரியல் எஸ்டேட்டில் அதிகரிக்கும் விலைகள், சொத்து பராமரிப்பு, வரி செலுத்துதல் மற்றும் பயன்பாட்டு செலவீனங்களையும் கவனிக்க வேண்டும். கடன் வாங்கி சொத்துகள் வாங்கும்போது தவணைகளை உரிய காலத்தில் கட்ட வேண்டியதிருக்கும். வட்டி விகிதம் சொத்தின் மதிப்பைக் குறைத்து விடக்கூடும். வாடகை மூலம் வருவாய் ஈட்டினாலும் வாடகைதாரர்கள் கிடைக்காமல் போகலாம். வாடகை கட்டணம் மாறுதலுக்கு ஆளாகலாம்.

ரியல் எஸ்டேட்டில் உள்ள மற்றொரு முக்கியப் பிரச்னை நினைத்த நேரத்தில் விற்க முடியாது. சொத்துகளை விற்பது என்பது பல்வேறு சிக்கலான நடமுறைகள், வாங்கும் நபர்களை கண்டறிவது, பதிவு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் விளைவாக நீண்ட காலம் கடந்தபின்னர்தான் சொத்துகளை விற்க முடிகிறது.

அதற்கு நேர்மாறாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது எளிதாக அவற்றை விற்கவோ மீண்டும் வாங்கவோ முடியும். பங்கு வர்த்தகத்துக்கு நீங்கள் புதியவராக இருந்தால் சந்தை பற்றிய விவரங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.அதன் அடிப்படை விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

எனவே ரியல் எஸ்டேட்டுடன் ஒப்பிட்டால் புதிய முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை நல்ல வாய்ப்பாகத் தோன்றுகிறது. டிமேட் அக்கவுன்ட் திறத்தல், டிரேடிங் அக்கவுன்ட், நம்பகமான பங்குத்தரகர்கள், முதலீட்டாளர்கள் மூலம் பங்குச்சந்தையை எளிதாக அணுகலாம்.

சிறிதளவு புரோக்கர் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும், லாபத்தை காண்பதுதான் பங்குச் சந்தையில் உள்ள சவால். SEBI அறிக்கையின்படி கடந்த 2022 நிதியாண்டில் 11 சதவீத வர்த்தகர்கள் மட்டுமே லாபத்தை கண்டுள்ளனர். தினசரி வர்த்தகம் மூலம் முதலீட்டாளர்கள் உடனடியாக லாபம் பார்த்துவிட முடியாது.

ப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ்களில் முதலீடு செய்தாலு்ம் நல்ல முதலீட்டாளர்கள் கூட பரந்த போர்ட்போலியோவில் முதலீட்டை வேறுபடுத்தும் ஒழுக்கம் இல்லாதவர்களாக உள்ளனர். இது செல்வத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாகும்.

இருப்பினும் ரியல் எஸ்டேட்டை விட பங்குச்சந்தைகள் ஒரு பெரிய சாதகத்தை தருகின்றன. பங்குகள் உடனடியாக பணமாக மாற்றப்பட்டு உங்களது கணக்கில் வரவு செய்யப்படும். முதலீட்டில் வருமானம் குறித்து பார்த்தால் இந்தியாவில் சொத்து வாங்குதல் பரவலான பழக்கம் என்று தெரியவந்தாலும் 10 ஆண்டு காலத்தில் 10 சதவீத சொத்துகள் மட்டுமே விற்கப்படுகின்றன.

ஆனால் சென்செக்ஸ் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. பெரும்பாலான மியூச்சுவல் பண்ட்கள் இதே அளவிலான லாபத்தைத் தான் தருகின்றன. வரிகளை ஒப்பிட்டால் இரு துறைகளிலும் அதிகரித்துதான் உள்ளன.

இதனிடையே லாபத்துக்காக மட்டும் முதலீட்டாளர்கள் சொத்துகளை வாங்குவதில்லை. அதில் இருந்து மறைமுகமாக வாடகை வருவாயை எதிர்பார்க்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்க்கையில் இந்தியாவில் வாடகை வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய மெட்ரோக்களில் சொத்தில் இருந்து வரும் வாடகை 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. தொடக்கத்தில் ஒரு சொத்தை வாங்கும்போது ஏற்படும் செலவுகளையும் வாடகையும் ஒப்பிட்டால் இதுதான் காரணமாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+