மாசம் ரூ.80000 வாடகை குடுக்கிறதுக்கு சொந்தமா வீடு வாங்கிடலாம்.. அந்தர் பல்டி அடிக்கும் 2K கிட்ஸ்..!

பெங்களூரு: பெங்களூருவில் வீட்டு வாடகை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் millennials மற்றும் Gen Z வயதினர் வாடகை வீட்டிற்கு பதிலாக சொந்த வீட்டினை வாங்க முடிவு செய்துள்ளனர். கடந்த 4-5 வருடங்களாக இளம் தலைமுறையில் சொந்த வீட்டு வாங்குவது வேஸ்ட், வாடகை வீடு தான் பெஸ்ட் என பேசி வந்த நிலையில், அதிகரிக்கும் வீட்டு வாடகையை பார்த்து பழைய படி சொந்த வீட்டை வாங்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

நோபுரோக்கர் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாடகை வீட்டை விடுத்து சொந்த வீடு வாங்குவதையே விரும்புவதாக தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெங்களூருவில் நோ புரோக்கர் தளம் வாயிலாக வீடு வாங்கியவர்களில் 60% பேர் மில்லினியல்ஸ் மற்றும் ஜென் ஸி வயதினர் ஆகும். இதில் 16% பேர் ஜென் ஸி என நோ புரோக்கர் நிறுவனத்தின் துணை நிறுவனர் சவுரப் தெரிவிக்கிறார்.

மாசம் ரூ.80000 வாடகை குடுக்கிறதுக்கு சொந்தமா வீடு வாங்கிடலாம்.. அந்தர் பல்டி அடிக்கும் 2K கிட்ஸ்..!

மில்லினியல்கள் எனப்படுபவர்கள் 27 முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள், ஜென் ஸி எனப்படுபவர்கள் 11 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள். பெங்களூரில் பிரதான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் வீட்டு வாடகைகளில் மதிப்பு 45 முதல் 50 % வரை உயர்ந்துள்ளது.

பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாத வாடகை 50,000 முதல் 65,000 வரை உயர்ந்துள்ளது. அதே வேளையில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை 80,000 வரை அதிகரித்துள்ளது.

பெங்களூரில் செயல்பட்டு வரக்கூடிய ரியாலிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனரான சுனில் அண்மைக்காலமாக 1 முதல் 2 கோடி ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை பெங்களூருவில் அதிகரித்துள்ளது என்றும், இவர்கள் பெரும்பாலும் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கிறார். அதிகளவிலான வாடகை செலுத்துவதற்கு பதிலாக சொந்தமாக வீடு வாங்கிவிடலாம் என்ற நோக்கத்தில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என கூறுகின்றனர்.

அண்மையில் கர்நாடகா அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் கர்நாடக மாநிலத்தில் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனிநபர் வருமானம் என்பது 5.8 சதவீதம் என உயர்ந்துள்ளது. அதே வேளையில் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் பெங்களூரில் வேலை செய்பவர்களின் ஊதியமும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தான் மில்லினியல்கள் மற்றும் ஜென் ஸி வயதினர் சொந்த வீடு வாங்கும் முடிவினை எடுக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

பெங்களூருவில் வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்ந்து வருவதன் காரணமாக பெரும்பாலானோர் வாடகை வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் வீடுகளை வாங்குகின்றனர் என இங்கே செயல்படக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்திரா நகர், கோரமங்கலா மற்றும் ஒயிட் ஃபீல்ட் பகுதிகளில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+