இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு இந்தியாவில் இருக்கும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியைத் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆனால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு சுமார் 350 பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைத்தும், விலக்கும் அளித்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் திட்டம் என்ன..? உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கு மாறியுள்ளதா..?
சுங்க வரிக் குறைப்பு
பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 350க்கும் அதிகமான பொருட்களுக்குச் சுங்க வரி படிப்படியாகக் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். வரி விலக்கு அளிக்கப்படும் பட்டியலில் விவசாயப் பொருட்கள், இரசாயனங்கள், துணிகள், மருத்துவச் சாதனங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவையும் அடக்கம்.
இறக்குமதி பொருட்கள்
இதேபோல் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் பல உதிரிப்பாகங்கள், மூலப்பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது.
இந்திய உற்பத்தி
மேலும் வரி குறைக்கப்பட்ட பல பொருட்கள் மீது இதுநாள் வரையில் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டு வந்தது. இதோடு வரி குறைக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கேப்பிடல் குட்ஸ் சந்தை
தற்போது செய்யப்பட்ட சுங்க வரி மாற்றத்தின் மூலம் நாட்டின் கேப்பிடல் குட்ஸ் சந்தைக்குச் சாதகமாகவே உள்ளது. மேலும் நாட்டின் உற்பத்தி அளவீட்டை 2025க்குள் இரட்டிப்பு வளர்ச்சி அடைய இந்த மாற்றம் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7.5 சதவீத வரி
இதேபோல் நிலக்கரி சுரங்க திட்டங்கள், மின்சாரத் திட்டங்கள், ரயில்வே, மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு அளிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்குச் சுங்க வரி 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
MSME நிறுவனங்கள்
மேலும் தற்போது குறைக்கப்பட்டு உள்ள வரிக் குறைப்புகள் MSME நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உதாரணமாக ஸ்டீல் ஸ்கிராப் மீதான சுங்க வரிக் குறைப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், இது 2ஆம் தர ஸ்டீல் உற்பத்தியாளர்கள் குறிப்பாக MSME பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும்.
வரி உயர்வு
தற்போது மத்திய அரசின் முடிவின் படி உற்பத்திக்குப் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரியைக் குறைத்துவிட்டு, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும்.
படிப்படியாகக் குறையும்
இந்த வரிக் குறைப்புப் படிப்படியாக மட்டுமே குறைக்கப்படும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான கால அவகாசம் கிடைக்கும். மேலும் இந்த வரிக் குறைப்பு இந்தியாவின் உற்பத்தியைக் கட்டாயம் உயர்த்தும் என நம்புகிறது மோடி அரசு.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications