தற்போது அனைவருக்கும் மிக எளிமையாக கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன . நாம் முதலில் பணத்தை செலவு செய்து விட்டு பின்னர் அந்த பணத்தை செலுத்தி விட கூடிய ஒரு வாய்ப்பினை கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன .
கிரெடிட் கார்டுகள் பெரும்பாலான மக்களிடையே புழக்கத்திற்கு வந்திருக்கிறது. பலரும் தங்களுடைய மாதாந்திர செலவினங்களையும் இந்த கிரெடிட் கார்டுகளை நம்பித்தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பழக்கம் என்பது அதிகரித்திருக்கிறது. கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அந்த அந்த தொகையை சரியான நேரத்தில் சரியான முறையில் திரும்ப செலுத்தினால் அவர்களின் கிரெடிட் ஸ்கோர் என்பது உயரும். இதனால் பல நன்மைகளும் இருக்கின்றன.

அதே வேளையில் நாம் கிரெடிட் கார்டில் சரியான முறையில் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது படிப்படியாக வளர்ந்து பெரிய கடனாக வந்து நிற்கும். அப்படித்தான் டெல்லியை சேர்ந்த ஒரு 31 வயது நபர் தனக்கு எப்படி கிரெடிட் கார்டுகள் மிகப்பெரிய கடன் சுமையாக மாறின என்றும் அதனை எப்படி அவர் சரி செய்து கடன்களை அடைத்தேன் என்றும் விரிவாக தெரிவித்திருக்கிறார் .
ரெடிட் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அந்த 31 வயது நபர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு நான் என்னுடைய முதல் கிரெடிட் கார்டை வாங்கினேன் , கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்த தொடங்கிய போது எனக்கு அவ்வளவு ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது நினைத்ததற்கெல்லாம் கிரெடிட் கார்ட் ஸ்வைப் செய்து வாங்கினேன் என கூறியுள்ளார். ஆனால் 2018 ஆம் ஆண்டில் தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. கிரெடிட் கார்டு வாங்கிய பிறகு நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிகம் செலவு செய்ய தொடங்கினேன் என்னை அறியாமல் பெரிய கடனில் விழுந்து விட்டேன் என கூறியுள்ளார்.
எனக்கு எவ்வளவு கடன் இருக்கிறது நான் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்பதை கணக்கீடு செய்த போது எனக்கு தலையே சுற்றியது எனக் கூறியிருக்கிறார். இதனை அடுத்து கிரெடிட் கார்டு கடன் வலையிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என முடிவு செய்து அவர் கிரெடிட் கார்டை கொண்டு பொருட்களை வாங்குவதை தவிர்த்தாராம்.
அடுத்ததாக பட்ஜெட் போட்டு பணத்தை செலவு செய்து படிப்படியாக கடனை அடைத்தாராம், இருந்தாலும் நிலுவை தொகைக்கு வட்டி செலுத்த வேண்டி இருக்கிறதே எவ்வளவு அடைதாலும் கடன் குறையவில்லையே என்பதை உணர்ந்த அவர் தன்னிடம் இருந்த பல்வேறு சேமிப்புகளை எடுத்து கிரெடிட் கார்ட் கடன்களை அடைத்து விட்டேன் என கூறியுள்ளார்.
கிரெடி கார்டு கடன்களை அடைத்த பின்னர் எனக்கு கிடைத்த மன நிம்மதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு இருப்பதாக தெரிவிக்கிறார். பலரும் அவருடைய இந்த செயலை பாராட்டி இருக்கின்றனர். சிலர் கிரெடிட் கார்டுகள் சரியான முறையில் பயன்படுத்தினால் சரியான நமக்கு மிகச் சிறந்த பலன்களை தரும், அதுவே நாம் அதிக செலவு செய்ய தொடங்கி விட்டோம் என்றால் நாளடைவில் நிம்மதியையும் நம்முடைய வருமானத்தையும் சேர்ந்து உறிஞ்சி விட தொடங்கும் எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications