சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் வருடாந்திர கூட்டத்தில் அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி இணைய சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.
இந்த 5ஜி சேவையானது, 4ஜி சேவையினை விட பல மடங்கு வேகத்தில் தரவுகளை வேகமாக பதிவு செய்ய முடியும். பதிவிறக்கம் முடியும் என்பதால் இது பெருத்த எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது.
இணைய சாதனங்கள் அதிகரிக்கும்
இதற்கிடையில் இந்த வருடாந்திர கூட்டத்தில் பேசிய ஆகாஷ் அம்பானி, இந்தியாவில் 5ஜி சேவை அதிகரிக்கும்போது, தற்போதைய 800 மில்லியன் இணைய சேவை சாதனங்கள், இன்னும் ஒரு வருடத்தில் 1.5 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அல்ட்ரா மொபைல் போன் தயாரிப்பு
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அல்ட்ரா மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஜியோ 5ஜி
ஜியோ 5ஜி சேவையானது இன்னும் அற்புதமான ஒரு விஷயம். இது அதிவேக நிலையான பிராட்பேண்ட் சேவை என்று ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஜியோ 5ஜி மூலம் நாடு முழுவதும் 5ஜி உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அதன் மூலம் உயர்தர கல்வி சேவையினை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேகமில்லை
5ஜி பிராட்பேண்ட் சேவை என்பது வேகத்தினை கூட்டுகின்றது. இதன் மூலம் தாமத்தினை தவிர்க்க முடியும். நமது நாட்டில் பல நெட்வொர்க்குகள் இருந்தாலும், ஒன்றில் கூட 1 Gbps வேகம் பெறுவதில்லை என ஆகாஷ் அம்பானி சுட்டிக் காட்டியுள்ளார்.
5ஜிக்காக மாபெரும் கூட்டணி
முன்னதாக முகேஷ் அம்பானி பேசும்போது, மேட் இன் இந்தியா 5ஜி கூட்டணியில் மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், எரிக்சன், பேஸ்புக் ஆகிய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இணைந்து பணியாற்றியது. அடுத்ததாக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது என்றும் கூறியிருந்தார். மொத்தத்தில் இந்த மாபெரும் கூட்டணி 5ஜி சேவை இன்னும் மேம்படும் எனலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications