முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் நிதி சேவைகள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ்-ன் இப்புதிய கடன் சேவைகள் அளிக்கும் வர்த்தக பிரிவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிக்க முடிவு செய்து தனியாக இயக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் மே 2 ஆம் தேதி முக்கிய கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி நிர்வாகத்திற்கு நிதி சேவை பிரிவை தனியாக பிரிக்க பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஒப்புதல் அளித்துள்ளது.

மே 2 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தனியாக பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் தற்போது Reliance Strategic Investments ஆக இயங்கி வரும் நிதிசேவை பிரிவு தனியாக பிரித்த பின்பு இதன் பெயரை Jio Financial Services Limited என மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் RIL பங்கு எண்ணிக்கைக்கு இணையாக Jio Financial Services Limited பங்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒருவர் 10 ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருந்தால் அவருக்கு தானாக 10 io Financial Services பங்குகள் கிரெடிட் செய்யப்படும்.
Jio Financial Services Limited நிறுவவனம் தனது வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களுக்கு கடன் அளிக்கும் புதிய சேவையை வழங்க உள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் தனது பொருட்களை வாங்குவோம் கன்ஸ்யூமர் மற்றும் மெர்செனட் ஆகியோருக்கு கடன் கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
Jio Financial Services நிறுவனம் தற்போது NBFC நிறுவனமாக இருக்க போகிறது, ஆனால் எதிர்காலத்தில் வங்கி உரிமம் பெறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்திய NBFC சந்தையின் மதிப்பு 10.84 லட்சம் கோடி ரூபாய், இச்சந்தையில் பல நிறுவனங்கள் இருக்கும் வேளையிலும், பெரிய வர்த்தக சம்ராஜ்ஜியங்களான டாடா, ஆதித்யா பிர்லா, பஜாஜ் போன்றவை இருக்கும் வேலையில் ரிலையன்ஸ் களத்தில் இறங்கியுள்ளது.
NBFC பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களை பெற்று மிகப்பெரிய ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் உடன் தற்போது Jio Financial Services நிறுவனம் போட்டிப்போட உள்ளது. சண்டைன்னு வந்த சட்டை கிழியும் என்பது போல் இரு நிறுவனங்கள் மத்தியிலான போட்டி தான் இந்திய NBFC-யின் எதிர்காலம்.
இதேவேளையில் வங்கிகளுக்கு இணையாக NBFC நிறுவனங்களுக்கு விதிமுறையும், கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் செய்து வருகிறது ரிசர்வ் வங்கி. இதனால் ஒருப்பக்கம் போட்டி, மறுப்பக்கம் கடுமையான ஆர்பிஐ விதிமுறைகள் மத்தியில் Jio Financial Services நிறுவனம் வெற்றிப்பெறுவது என்பது எளிதான காரியமில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications