இந்தியாவின் மிகப்பெரிய வரத்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவின் தடைக்கு பின்பும் தொடர்கிறது. அமெரிக்க அரசு சமீபத்தில் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தும் காரணத்தால் டிரம்ப் நிர்வாகம் Rosneft மற்றும் Lukoil ஆகிய நிறுவனங்களிடம் இருந்து எந்தொரு நாடும், எந்தொரு நிறுவனமும் வர்த்தகம் செய்ய கூடாது என வர்த்தக தடையை விதித்தது.
இந்த நிலையிவ் அமெரிக்கா விதித்த தடையில் இருந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு மாத காலம் அவகாசம் பெற்றுள்ளது என எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு தரப்பில் இருந்தும் சரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பில இருந்தும் சபி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ரிலையன்ஸ் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் நிலையில், இந்நிறுவனம் தனது எரிபொருள் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக நிலையான கச்சா எண்ணெய் சப்ளை,குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய ரோஸ்நெஃப்ட் உடன் நீண்டகால ஒப்பந்தம் செய்து கொண்டது. தற்போது அமெரிக்காவின் தடையால் இந்த சப்ளை பாதிக்கப்பட்ட நிலையில் டிரம்ப் அரசு கொடுத்துள்ள இந்த அவகாசம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உதவும்.
ரிலையன்ஸ் ரோஸ்நெஃப்ட்டுடன் செய்து கொண்டுள்ள நீண்டகால ஒப்பந்தம் மூலம் தினசரி 5 லட்சம் பேரல் ரஷ்ய எண்ணெய் வாங்குகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் 14 லட்சம் பேரல் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளாகத்திற்கு இந்த சப்ளை மிகவும் முக்கியமானது.
அக்டோபர் மாதம் அமெரிக்கா அரசு ரோஸ்நெஃப்ட் மீது தடை விதித்தது, தற்போது ரிலையன்ஸ் நவம்பர் 21 வரையில் பரிவர்த்தனைகளை முடிக்க அவகாசம் அளித்தது. இதேவேளையில் நவம்பர் 22 முதல் ரிலையன்ஸ் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தில் இருந்து சுமார் 15 கார்கோ கப்பல் கச்சா எண்ணெய் பெற்றுள்ளது என க்ளெப்பர் தரவுகள் கூறுகிறது. ஆனால் ரிலையன்ஸ் இவை ஏற்கனவே செய்யப்பட்ட ஆர்டர்கள் என்று கூறியது.
அமெரிக்க தடைக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்யும் ரஷ்யாவுக்கு வருமானம் என்பதால் இந்த ஒரு மாத அவகாசம் ரஷ்யாவுக்கு ஜாக்பாட் தான்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications