இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலகிலேயே முதல் முறையாக (first consignment) 'கார்பன் நியூட்ரல் ஆயிலை' (carbon-neutral oil) அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளது.
இதன் மூலம் 2035ஆம் ஆண்டுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜீரோ கார்பன் நிறுவனமாக மாற நிர்ணயம் செய்துள்ள இலக்கை வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகரில் வைத்துள்ளது. இந்தச் சுத்திகரிப்பு ஆலையில் வருடத்திற்கு 68.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்-ஐ சுத்திகரிப்பு செய்யும் அளவிற்குத் திறன் கொண்டுள்ளது.
இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து ரிலையன்ஸ் பெர்மியன் பேசின் தளத்தில் இருந்து சுமார் 2 மில்லியன் டன் கார்பன் நியூட்ரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதியைச் செய்துள்ளது. அமெரிக்காவின் Oxy Low Carbon Ventures (OLCV) இந்தக் கார்பன் நியூட்ரல் கச்சா எண்ணெய்யை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்ய உள்ளது.
உலகம் முழுவதும் இருக்கும் முன்னணி நிறுவனங்களும், அரசுகளும், வர்த்தகத் தலைவர்களும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் 2035ஆம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் நிறுவனமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், கார்பன் நியூட்ரல் ஆயில் இறக்குமதி இத்திட்டத்தின் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.