டெல்லி: இந்தியாவில் பேட்டரி உற்பத்தி தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
மத்திய கனரக தொழில்துறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமான பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் பேட்டரிகளுக்கான நவீன ரசாயன செல்களை தயாரிக்க இருக்கிறது.

முன்னதாக செல்கள் தயாரிப்பு தொடர்பாக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டு அதில் ரிலையன்ஸ் எனர்ஜி பேட்டரி நிறுவனத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம் 10GWh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு 18,100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக 2022 ஆம் ஆண்டிலேயே முதல் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. அப்போது மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனை அடுத்து தற்போது ரிலையன்ஸ் உட்பட மொத்தம் நான்கு நிறுவனங்கள் ற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட இருக்கின்றன. மொத்தம் 50GWh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி ஆலைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது .மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து விட்டன. இதற்கு ஏற்ற வகையில் பேட்டரி உற்பத்தியை ஊக்கப்படுத்த அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மின்சார வாகனத்திற்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய தேவையான 35 பொருட்களுக்கு அரசு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தது.
இதன் மூலம் இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய இந்த பேட்டரிகள் இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என அரசு எண்ணுகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. இதனால் பேட்டரிகளின் தேவையும் உயர்ந்து வருகிறது. எனவே தான் இந்த துறையில் உற்பத்தியை ஊக்குவித்தால் அது வேலைவாய்ப்பையும் பெருக்கி பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என அரசு நம்புகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications