இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கவனத்தை பசுமை எரிசக்தி பக்கம் திருப்பியுள்ளது. உலகளவில் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு காரணமாக இருக்கும் கரியமிலவாயு வெளியீட்டை குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
2030க்குள் கரியமில வாயு வெளியீட்டை குறைப்பது என பல்வேறு நாடுகளும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளன. இதில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில் தான் ரிலையன்ஸ் குழுமம், குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய சோலார் கிராமத்தை அமைத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கட்டமைத்துள்ள இந்த சோலார் கிகா ஆலையில் நடப்பு நிதி ஆண்டிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த சோலார் ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பாக PV module, cell, wafers, polysilicon, glass ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டு நிதி அறிக்கையில் தங்களுடைய புதிய சோலார் ஆலை முதல் கட்டமாக செல் உற்பத்தியில் ஈடுபடும் என தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்த சோலார் பேனல்களுக்கு பிஐஎஸ் தரச் சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பசுமை எரிசக்தி துறை, தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் துறையாக இருக்கும் என கருதுகிறது. தங்களுடைய மற்ற தொழில்களை விட பசுமை எரிசக்தி துறை ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நம்புகிறது.
எனவே பசுமை எரிசக்தி துறையில் அதிக முதலீட்டையும் கவனத்தையும் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எலக்ட்ரோஐசர்கள் தயாரிப்பதற்கான தங்களுடைய ஆலைக்கு அரசின் நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் தான் இந்த மிகப்பெரிய ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி காம்ப்ளக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நவீன முறையில் இந்த உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. குஜராத்தில் பசுமை எரிசக்தி துறை உற்பத்திக்காக மட்டும் அம்பானி 5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதி தான் இந்த சோலார் கிராமம்.
Story Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications