டெல்லி: இந்திய பங்கு சந்தைகளில் சந்தை மதிப்பு என்பது பொதுவாக வர்த்தக நிறுவனத்தின் சந்தை மூலதனத்தினை குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
அதாவது தற்போதைய பங்கு விலையால், அதன் நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையை பெருக்கினால் கிடைக்கும் மதிப்பே சந்தை மதிப்பு எனப்படுகிறது.
சந்தை மதிப்பு என்பது சந்தையில் ஒரு சொத்து பெறும் விலை. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதலீட்டாளர்களின் வணிக வாய்ப்புகளைப் பற்றிய நல்ல அறிகுறி என்றும் கூறுவார்கள்.
கொரோனாவால் அடி வாங்கும் நிறுவனம்
ஆனால் நாட்டில் நிலவி வரும் கொரோனா ரணகளத்தின் மத்தியில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட அடி வாங்கி வருகின்றன என்பதற்கு இதுவே சாட்சியாகும். இன்னும் சொல்லப் போனால் சிலர் சந்தையினை பற்றி நன்கு அறிந்தவர்கள் இதனை வைத்தே, பங்குகள் மற்றும் எதிர்காலம் போன்ற பரிமாற்ற வர்த்தக கருவிகளை தீர்மானிப்பார்கள்.
ரிலையன்ஸிக்கு அதிக இழப்பு
இந்த நிலையில் கடந்த வாரத்தில் வர்த்தகமான விலையினை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டாப் 10 நிறுவனங்களில் அதிக இழப்பினை சந்தித்துள்ளது தி கிரேட் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் தான். இந்த டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பீட்டில் 1,37,311.31 கோடி ரூபாயினை இழந்துள்ளன.
லாத்தில் பார்தி ஏர்டெல், ஐடிசி
அதிலும் இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தான் டாப் நிலையில் உள்ளது. ஆனால் இதே பார்தி ஏர்டெல் மற்றும் ஐடிசி நிறுவனங்கள் மட்டுமே சற்று லாபத்தில் உள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 65,232.46 கோடி ரூபாய் குறைந்து, 9,24,855.56 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும்
இதே தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு 22,347.07 கோடி ரூபாய் குறைந்து, 4,87,083.88 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 13,192.26 கோடி ரூபாய் குறைந்து, 4,77,458.89 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இவங்களுக்கெல்லாம் இழப்பு தான்
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 9,770.06 கோடி ரூபாயாக குறைந்து, 2,08,900.79 கோடி ரூபாயாக சந்தை மதிப்பானது குறைந்துள்ளது. இதோடு இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 9,518.54 கோடி ரூபாய் சரிந்து, 2,77,814.09 கோடி ரூபாயினை எட்டியது. இதே ஹெச்டிஎஃப்சி 9,370.38 கோடி ரூபாயினை குறைந்து, 2,83,293.70 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
யாருக்கு எவ்வளவு இழப்பு?
கோடாக் மகேந்திரா வங்கியானது 7,805.2 கோடி ரூபாய் குறைந்து., 2,25,327.22 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 75.04 கோடி ரூபாய் குறைந்து 7,10,439 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே பார்தி ஏர்டெல் நிறுவனம் 13,147.89 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து, 3,02,292.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி
ஐடிசியின் சந்தை மதிப்பானது 7,744.11 கோடி ரூபாய் அதிகரித்து 2,02,330.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1.72% குறைந்து 544.97 புள்ளிகள் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications