ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் இதில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் இறங்கினால் அந்த துறையில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் இறங்க உள்ளதாகவும், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டு இந்த துறையில் ஆழமாக களமிறங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விண்ணப்பம்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட அந்நிறுவனம் ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுக் கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட ரிலையன்ஸ் இரண்டு புதிய நிறுவனங்களை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 புதிய நிறுவனங்கள்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட ரிலையன்ஸ் டு லிஸ்ட் ஃபைனான்ஸ் சர்வீஸ் ஆர்ம் மற்றும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் என்று பெயரிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.1000 கோடி முதலீடு
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.1,000 கோடி மூலதன அடிப்படையில் நிறுவப்பட உள்ளதாக தெரிகிறது. IRDAI விதிமுறைகளின்படி, ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகங்களுக்கான குறைந்தபட்ச செலுத்தப்பட்ட மூலதனம் தலா ரூ.100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தயார் நிலை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் வணிகத்தின் பிரிவு இன்னும் முறையாகத் தொடங்கவில்லை என்றாலும், அந்நிறுவனம் தொடங்கியவுடன் அதன் செயல்பாடுகளுக்குத் தயாராக இருக்கும் வகையில் அனைத்து உரிமங்களையும் பெற்று தயார் நிலையில் இருக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சவால்
ரிலையன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபட்டால், ஏற்கனவே இன்சூரன்ஸ் வணிகத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் சவால் ஏற்படும் என்பதால் பல நிறுவனங்கள் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.