இந்தியாவில் அதிக மதிப்புடைய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம், ரீடைல், டிஜிட்டல் சேவைகள், மீடியா, நியூ எனர்ஜி என மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்த இந்தியா முதல் உலக நாடுகள் வரையில் இருக்கும் நிறுவனங்களை கைப்பற்றி வருகிறது. இதோடு ஐபிஓ வெளியிடவும் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது இந்த நிலையில் 2005 முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் CFO ஆக இருக்கும் அலோக் அகர்வால் இடத்தில் தற்போது ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கையில் இனி நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி இருப்பார் என தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி தனது எதிர்கால வளர்ச்சியை குறிவைத்து இந்த புதிய மாற்றத்தை அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மனித வளபிரிவு, நாமினேஷன் மற்றும் ரெமுனரேஷன் கமிட்டி கொடுத்த பரிந்துரைகள் படி போர்ட் ஆப் டைரக்டர்ஸ் மார்ச் 24 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டு முதல் Joint Chief Financial Officer ஆக இருக்கும் ஸ்ரீகாந்த் ஜூன் 1 முதல் Chief Financial Officer பணியை தொடர்வார் என தனது அறிக்கையில் பங்குச்சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் தெரிவித்துள்ளது.
அலோக் அகர்வால்
இதன் மூலம் தற்போது தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் அலோக் அகர்வால்-க்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு மூத்த ஆலோசகராக அலோக் அகர்வால் செயல்படுவார்.
30 வருடம்
ஜூன் 1 முதல் அலோக் அகர்வால் மூத்த ஆலோசகராக பல முக்கியமான வர்த்தக முடிவுகளை எடுக்க உதவ உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அலோக் அகர்வால் சுமார் 30 வருடம் பணியாற்றியுள்ளார்.
பாராட்டு
ஸ்ரீ அலோக் அகர்வால் ஒரு திறமையான நிதி நிபுணர் ஆவார். அவர் 2005 ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பயணத்தில் அவரது பங்களிப்பை நிர்வாகம் பாராட்டுகிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications