இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல வணிகங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் நாகோதேன் ஆலையை ஆகஸ்ட் 25 வரையில் மூடுவதாக அறிவித்துள்ளது. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக இந்த ஆலையினை ஏன் மூடியுள்ளது? இது மீண்டும் எப்போது திறக்கப்படும். மற்ற முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பா
மீண்டும் எப்போது?
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டின் ஒருமைப்பாட்டினை உறுதி செய்வதற்காக அதன் நாகோதேன் உற்பத்தி பிரிவினை ஒரு வாரத்திற்கு மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிலையன்ஸின் இந்த ஆலையானது ஆகஸ்ட் 25 முதல் மீண்டும் செயல்பட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற தளங்களில் இருந்து சப்ளை
ஒரு வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும், அதனை சரிசெய்ய தற்போதைய கையிருப்பு மற்றும் பிற உற்பத்தி தளங்களில் இருந்து பொருட்கள் சப்ளை செய்யப்படும் என பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னென்ன பொருட்கள்
நாகோதேன் ஒரு பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனமாகும். இந்த ஆலையில் எத்திலீன் ஆக்சைடு, எத்திலீன் கிளைகோல், லீனியர் லோ டென்சிட்டி ஹை டென்சிட்டி பாலிஎதிலீன், ஹெக்ஸீன்-1 மற்றும் பலவற்றை கேஸ் அடிப்படையிலான பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.
கடந்த 2018ல் ரிலையன்ஸ் நிறுவனம் 2,338 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாகோதேனில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகத்தினை விரிவாக்கம் செய்ய அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சவுதி அராம்கோ – ரிலையன்ஸ் ஒப்பந்தம்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோவுக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சம்பந்தமான வணிகத்தில் 20 - 25 பில்லியன் டாலர் மதிப்பிலான 20% பங்குகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. எனினும் இது கொரோனாவினால் தொடர்ந்து தாமதமாகி வருகின்றது.
இதற்கிடையில் பங்கு சந்தை விடுமுறை ஆதலால் இதன் பங்கு விலையானது மாற்றம் காணவில்லை. இது கடந்த அமர்வில் 0.39% அதிகரித்து, 2,172.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications