இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல வணிகங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் நாகோதேன் ஆலையை ஆகஸ்ட் 25 வரையில் மூடுவதாக அறிவித்துள்ளது. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக இந்த ஆலையினை ஏன் மூடியுள்ளது? இது மீண்டும் எப்போது திறக்கப்படும். மற்ற முக்கிய விவரங்கள் என்ன வாருங்கள் பா
மீண்டும் எப்போது?
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டின் ஒருமைப்பாட்டினை உறுதி செய்வதற்காக அதன் நாகோதேன் உற்பத்தி பிரிவினை ஒரு வாரத்திற்கு மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிலையன்ஸின் இந்த ஆலையானது ஆகஸ்ட் 25 முதல் மீண்டும் செயல்பட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற தளங்களில் இருந்து சப்ளை
ஒரு வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும், அதனை சரிசெய்ய தற்போதைய கையிருப்பு மற்றும் பிற உற்பத்தி தளங்களில் இருந்து பொருட்கள் சப்ளை செய்யப்படும் என பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னென்ன பொருட்கள்
நாகோதேன் ஒரு பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிறுவனமாகும். இந்த ஆலையில் எத்திலீன் ஆக்சைடு, எத்திலீன் கிளைகோல், லீனியர் லோ டென்சிட்டி ஹை டென்சிட்டி பாலிஎதிலீன், ஹெக்ஸீன்-1 மற்றும் பலவற்றை கேஸ் அடிப்படையிலான பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.
கடந்த 2018ல் ரிலையன்ஸ் நிறுவனம் 2,338 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாகோதேனில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகத்தினை விரிவாக்கம் செய்ய அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சவுதி அராம்கோ – ரிலையன்ஸ் ஒப்பந்தம்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோவுக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சம்பந்தமான வணிகத்தில் 20 - 25 பில்லியன் டாலர் மதிப்பிலான 20% பங்குகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. எனினும் இது கொரோனாவினால் தொடர்ந்து தாமதமாகி வருகின்றது.
இதற்கிடையில் பங்கு சந்தை விடுமுறை ஆதலால் இதன் பங்கு விலையானது மாற்றம் காணவில்லை. இது கடந்த அமர்வில் 0.39% அதிகரித்து, 2,172.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications