ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 2028 ஆம் ஆண்டிற்குள் ரூ. 5,000 ஆக உயர கூடும் என ஈக்வினாமிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனர் ஜி சொக்கலிங்கம் கணித்துள்ளார்.
அடுத்த 4-5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 100 சதவீதம் உயரக்கூடும் என்று கூறினார். மே 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.23 சதவீதம் உயர்ந்து 2,484 ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில் ஜி சொக்கலிங்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குறித்து கூறுகையில் ரிலையன்ஸ் ஒரு 'மினி எகானமி'யாக உருவாகி வருகிறது. இந்நிறுவனம் தொழில்நுட்ப உதவியுடன், அதன் கட்டமைப்புகளை பயன்படுத்தி அனைத்து வணிக பிரிவுகளிலும் நுழைவது மட்டும் அல்லாமல் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைக்கிறது.
இதனால் வேறு எந்த நியூ ஏஜ் ஈ-காமர்ஸ் நிறுவனங்களை காட்டிலும் நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்குதை உறுதியாக பரிந்துரை செய்கிறேன் என ஈக்வினாமிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனர் ஜி சொக்கலிங்கம் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொலைத்தொடர்பு மற்றும் ரீடைல் வணிகங்களின் வருவாய் மற்றும் லாபத் தளத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது ரிலையன்ஸ் புதுப்பிக்கத்தக்க மற்றும் கிரீன் எனர்ஜி, FMCG, மீடியா மற்றும் நிதிச் சேவைகள் வணிகங்களில் இறங்கியுள்ளனர்.
கடந்த 20 - 25 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து லாபகரமானதாக மாற்றியுள்ளனர், பல வர்த்தகத்தில் சாதனையும் படைத்துள்ளனர். இதனால் புதிதாக இறங்கியுள்ள துறையில் ரிலையனஸ் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என ஜி சொக்கலிங்கம் தெரிவித்தார்.

இதன் மூவம் அடுத்த 4-5 ஆண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு சிறிய பொருளாதாரமாக இருக்கும் மற்றும் அதன் வர்த்தகம் சந்தை மதிப்பீடு அளவு இந்தியாவில் உள்ள ஒரு சிறிய மாநிலத்துடன் ஒப்பிடப்படும் அளவுக்கு உயரும் என தெரிவித்தார்.
போட்டி மிகுந்த FMCG துறையில் வெற்றிபெற பல தசாப்தங்கள் பழமையான பிராண்டுகளை வாங்கி மக்களிடம் வேகமாகழும், எளிதாகவும் நுழைந்துள்ளனர். இதுவே அதன் ஸ்மார்ட்டான முடிவுக்கு கொள்கைக்கும் முக்கிய உதாரணமாக உள்ளது.

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை ஒருவர் வாங்கி அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஹோல்டு செய்து வைத்திருந்தால் 100 சதவிகிதம் வளர்ச்சியை பார்க்க முடியும் என நான் கூறுவேன் என்று ஜி சொக்கலிங்கம் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications