பீனிக்ஸ் பறவையாய் எழும் அனில் அம்பானி.. அடுத்தடுத்து மாஸ் காட்டுகிறார்..!!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒரு காலத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது மட்டும் அல்லாமல் தனது சகோதரர் முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிவிட்டு முன்னிலை வகித்த அனில் அம்பானி, அடுத்தடுத்து தவறான முடிவுகளால் வர்த்தகத்தையும், சொத்துக்களையும் இழந்து நீதிமன்றத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு ஜீரோ என சொல்ல வைத்தது.

ஆனால் கடந்த 6 மாதத்தில் பல பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த அனில் அம்பானி தற்போது அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரியில் வெடிபொருட்கள், தோட்டாக்கள் மற்றும் சிறு ஆயுதங்கள் தயாரிப்பிற்கான ஒருங்கிணைந்த தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

 பீனிக்ஸ் பறவையாய் எழும் அனில் அம்பானி.. அடுத்தடுத்து மாஸ் காட்டுகிறார்..!!

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் இத்தொழிற்சாலைக்காக ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யும் என்று அறிவித்துள்ளது.

இதற்காக மகாராஷ்டிராவின் வடாட் தொழில்துறை (Watad Industrial Area) பகுதியில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு திருபாய் அம்பானி டிபென்ஸ் சிட்டி (DADC) அமைக்கப்படும், என ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் பல ராணுவ தடவாளங்களை தயாரிக்கும் உரிமத்தை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்பே பெற்று இருந்தது.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் டசால்ட் ஏவியேஷன் மற்றும் தாலெஸ் ஆகிய பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கூட்டணி முயற்சிகளை மகாராஷ்டிரா மாநிலத்தின் மிஹானில் அமைத்து இயக்கி வருகிறது. டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (DRAL) மற்றும் தாலெஸ் ரிலையன்ஸ் பாதுகாப்பு சிஸ்டம்ஸ் (TRDS) ஆகிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை 100% ஏற்றுமதி செய்கின்றன.

சமீபத்தில் அனில் அம்பானியின் மின் உற்பத்தி நிறுவனமான விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் (VIPL) நிறுவனத்திற்க்கான உத்தரவாதமாக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தனது ரூ.3,872.04 கோடி கடன்களை அடைத்துள்ளது. இதன் மூலம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிதி நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது.

 பீனிக்ஸ் பறவையாய் எழும் அனில் அம்பானி.. அடுத்தடுத்து மாஸ் காட்டுகிறார்..!!

ரிலையன்ஸ் பவர், ரோசா பவர் சப்ளை, விஐபிஎல் மற்றும் சிஎஃப்எம் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த கடனைத் தீர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், ஆக்சிஸ் டிரஸ்டி சேவைகளுடன் ஒரு வெளியீட்டுப் பத்திரத்தை செயல்படுத்தியுள்ளது. இதில் விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் VIPL மூலம் வெளி வணிகக் கடன்கள் (ECBகள்) தொடர்பான ரிலையன்ஸ் பவரின் பொறுப்புகள் விடுவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் பவர் மற்றும் அதற்கு எதிராக தொடங்கப்பட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் திவால் மற்றும் திவால் கோட் (IBC) இன் கீழ் உள்ளவை உட்பட.

விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் இன் 92.60% பங்குகள் கடன் வழங்குவோருக்குப் பத்திரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ரிலையன்ஸ் பவரின் நிதி நிலைமையை மேம்படுத்தி, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+