டெலிகாம் துறையின் கிங் ரிலையன்ஸ் ஜியோ தான்.. ஒரே மாதத்தில் ராட்சத வளர்ச்சி..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் டெலிகாம் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக ட்ராய் செயல்பட்டு வருகிறது.

டெலிகாம் துறையின் கிங் ரிலையன்ஸ் ஜியோ தான்.. ஒரே மாதத்தில் ராட்சத வளர்ச்சி..!

ட்ராய் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் ட்ராய் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை இரண்டாவது முறையாக 1.2 பில்லியன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்த டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1198.28 மில்லியன் ஆகும். இதுவே ஏப்ரல் மாதத்தில் 0.16 சதவீதம் உயர்ந்து 1201.22 மில்லியன் என அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் மொத்த டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.2 பில்லியன் என்ற எண்ணிக்கையை தொட்டது. அதே ஆண்டில் ஜூலை மாதம் 1.21 பில்லியன் என்ற உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் மீண்டும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மீண்டும் 1.2 பில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தான் இந்த அளவு சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்த மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1165.49 மில்லியன் ஆகும்.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் புதிதாக 2.68 மில்லியன் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 472.42 மில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 752,000 வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஏர்டெல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 267.57 மில்லியன் என அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் பெருமளவில் சந்தாதாரர்களை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 1.23 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் 735,000 சந்தாதாரர்களை இழந்துள்ளது. எம்டிஎன்எல் நிறுவனம் 3,702 வாடிக்கையாளர்களையும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 29 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

இந்தியாவில் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 33.79 என இருந்து ஏப்ரலில் 34.26 மில்லியன் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்த பிரிவிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் புதிதாக 355,900 வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+