இந்திய டெலிகாம் சந்தையில் கடுமையான போட்டி இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கத் தொடர்ந்து குறைவான கட்டணத்திலேயே பல வருடங்களாக டெலிகாம் சேவை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டெலிகாம் நிறுவனங்களின் நிதிநிலை மிகவும் மோசமானது.
டெலிகாம் நிறுவனங்கள்
இதற்கிடையில் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டி ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலுகை தொகையை வரைவாகச் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை கொடுத்த நிலையில் நீண்ட காலமாகச் சந்தையில் இருக்கும் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் கடுமையான நிதிநெருக்கடியில் தள்ளப்பட்டு மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்ட காரணத்தால் தற்போது தொடர்ந்து இயங்கி வருகிறது.
குறைவான கட்டணம்
இந்த நிலையிலும் தொடர்ந்து குறைவான கட்டணத்தில் சேவை அளித்தால் நிறுவனம் திவாலாகி விடும் என்ற அச்சத்தில் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வரும் நிலையில் கட்டணத்தைத் தற்போது 20 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்தி அறிவித்துள்ளது.
கட்டண உயர்வின் தாக்கம்
டெலிகாம் கட்டண உயர்வின் தாக்கம் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கிய காரணத்தால் அக்டோபர் மாதத்தில் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் புதிய வாடிக்கையாளரின் வருகையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 17 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகச் சேர்த்த நிலையில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என டிராய் அறிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா
டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் அக்டோபர் மாதம் பார்தி ஏர்டெல் நிறுவனம் 4.9 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, வோடபோன் ஐடியா 9 லட்சம் வாடிக்கையாளர்களை களை இழந்துள்ளது. இதேவேளையில் ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் சந்தையிலும் 2.78 லட்சம் பேர் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களாக வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ-வுக்கு யோகம்
ரிலையன்ஸ் ஜியோ பெற்ற 17 லட்சம் வாடிக்கையாளர்கள் பெருமளவு பிற டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து வந்தவர்கள், இதேவேளையில் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 19 மில்லியன் அதாவது 1.9 கோடி வாடிக்கையாளர்களை இழந்து குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மற்றும் டிசம்பர்
ஆனால் இந்திய கிராமங்களில் ஏர்டெல் தொடர்ந்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. பிஎஸ்என்எல் அக்டோபர் மாதத்தில் 26,111 வாடிக்கையாளர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. டெலிகாம் நிறுவனங்களின் புதிய கட்டணங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வந்த நிலையில் இம்மாதங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.