ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபாவளிக்கு டபுள் தமாகா சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையில், வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு இலவச ஜியோ ஏர் ஃபைபர் சேவையைப் பெறுவார்கள் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பண்டிகை ஆஃபர் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும். இந்த சலுகை செப்டம்பர் 18 முதல் நவம்பர் 3 வரை செல்லுபடியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் துறையில் நுழைந்தபோது வெளியிட்ட அதே இலவச உத்தியை பிராட்பேண்ட் சந்தையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு முதலில் ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது மைஜியோவில் ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் அனைத்து வாடிக்கையாளரும் ஒரு வருடத்திற்கு ஜியோ ஏர்ஃபைபர் பெற தகுதியுடையவர். இது வீடுகளுக்கு அதிவேக இணைய இணைப்பைக் கொண்டுவருகிறது. ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபரின் புதிய வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இந்த சலுகை அனைத்து ஜியோவின் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருந்தால், ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது மைஜியோவில் ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் செலவிட வேண்டும். அல்லது JioAir ஃபைபர் இணைப்பைப் பெறும்போது, 2,222 ரூபாய்க்கு மூன்று மாத தீபாவளித் திட்டத்தை பெற வேண்டும். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் மூன்று மாத தீபாவளி திட்டத்திற்கு ரூ.2,222க்கு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இதற்கு தகுதியான வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் பரிந்துரைத்த 12 கூப்பன்களைப் பெறுவார்கள். ஒவ்வொன்றும் ஒரு மாத இலவச ஏர்ஃபைபர் சேவையைக் குறிக்கிறது. இந்த கூப்பன்கள் நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை செல்லுபடியாகும். இருப்பினும், இந்த கூப்பன்களுக்கு அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பொருந்தும். இந்தக் கூப்பன்கள் ரூ.15,000க்கு மேல் வாங்கும் எந்தக் கடையிலும் 30 நாட்களுக்குள் ரிடீம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் இந்த திட்டம் எக்ஸ்பைரி ஆகி விடும்.
இது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களுக்கு பயனர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க ஜியோ இதுமாதிரியான பெரிய நோக்கத்தைக் கொண்டுள்ளது. அம்பானியின் இந்த புதிய உத்தியானது, அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்கவைக்க, அதிக நன்மைகளை வழங்குவதன் மூலம் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் உடன் இணைப்பில் வைத்திருக்க ஆர்வமாக உள்ளது என்பது தெளிவாகிறது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இந்த சலுகை மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் குடும்பங்கள் அதிக அளவில் செலவு செய்வதைக் கருத்தில் கொண்டு இந்த ஆஃபர் ஆனது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஏர் ஃபைபரின் தனித்துவமான வேகம், கவரேஜ் மற்றும் மதிப்புத் திட்டங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களுக்கும் பயனளிக்கும். அதே நேரத்தில், சலுகைக்காக ரிலையன்ஸ் முன்வைத்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பயனர்கள் தெரிந்து கொள்வது நல்லது. இதுகுறித்த மேலும் தகவலுக்கு அருகிலுள்ள ரிலையன்ஸ் மற்றும் ஜியோ மையங்களை அணுகுவது நல்லது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications