மும்பை: இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான ரிலையன்ஸ், அதன் தொலைத் தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு முடிவினை இன்று வெளியிட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் இரு இலக்க வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் மூன்றாவது காலாண்டு நிகரலாபம், 28.3% அதிகரித்து, 4638 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3615 கோடி ரூபாயாக இருந்தது. இதே செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 4518 கோடி ரூபாய் லாபத்தினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் விகிதம்
மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 22,998 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,347 கோடி ரூபாயாக இருந்தது. இது வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில் 18.87% அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தி வருவாய் விகிதமானது 22,521 கோடி ரூபாயாக இருந்தது.
செயல்பாட்டு மார்ஜின்
இதன் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 26.6% அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 26.3% ஆக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 26.1% ஆக இருந்தது. இதே நிகர லாப மார்ஜின் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 17.1% ஆகவும், இது செப்டம்பர் காலாண்டில் 17% ஆகவும், கடந்த ஆண்டில் 26.1% ஆகவும் இருந்தது.
5ஜி விரிவாக்கம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது 5ஜி சேவையினை பல்வேறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து வருகின்றது. அதன் வயர்லெஸ் சேவையினையும் விரிவாக்கம் செய்து வருகின்றது. இதற்கிடையில் அதன் வளர்ச்சி விகிதம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோவின் நெட்வொர்த்
ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவை வழங்குனரான ஜியோ நிறுவனம், இதன் நெட்வொர்த் டிசம்பர் காலாண்டில் 2,11,281 கோடி ரூபாயாகும். இது செப்டம்பர் காலாண்டில் 2,06,644 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 1,93,616 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த சொத்து விகிதத்தில் கடன் விகிதம் 0.08% ஆகும்.
ஜியோவின் 5ஜி விரிவாக்க திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையினை 16 நகரங்களில் வெளியிடவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது. இது ஆந்திரபிரதேசத்தில் காக்கிநாடா, கர்னூலிலும், அசாமில் சில்சாரிலும், கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரே, ஷிவமொக்கா, பிடார், ஹோஸ்பேட், கடக் - பேட்டகேரி, மலப்புரம், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதன் முதலாக அறிமுகம்
கண்ணூர் (கேரளா), திருப்பூர் (தமிழ் நாடு), நிஜாமாபாத், கம்மம் (தெலுங்கானா), பரேலி (உத்திரபிரதேசம்) உள்ளிட்ட நகரங்களில், பெரும்பாலானவற்றில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.
உலகத் தரம் வாய்ந்த சேவை
ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளார்ட்பார்ம்ஸ் லிமிடெட், உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்காக நெட்வொர்க்கினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இது 6ஜி தொழில் நுட்ப வசதிகளை மாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு மேம்படுத்தும் அளவுக்கு, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications