முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனுடன் இணைந்து "ஸ்பின்னர்" என்ற புதிய ஸ்போர்ட்ஸ் டிரிங்க்-ஐ அறிமுகப்படுத்த உள்ளார். முகேஷ் அம்பானி ஏற்கனவே கேம்பா பிராண்ட் மூலம் இந்திய குளிர்பான சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முகேஷ் அம்பானி தற்போது ஸ்போர்ட்ஸ் டிரிங்க் பிரிவிலும் இறங்க உள்ளார்.
பொதுவாக ஸ்போர்ட்ஸ் டிரிங்க் என்றால் ஒரு விளையாட்டு வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக நியமிப்பது வழக்கம், ஆனால் முகேஷ் அம்பானி கொஞ்சம் ஸ்மார்ட்டாக விளையாட்டு வீரரை பார்ட்னராக சேர்த்துள்ளார். இதேபோல் சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் டிரிங்க் விலை அதிகமாக இருக்கும் வேளையில், பட்ஜெட் விலையிலும், மலிவான விலையில் அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து பிஸ்னஸ்மேனாக மாறியுள்ளார்,இவர் தற்போது சாக்லேட் மற்றும் குளிர்பானத்தை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை வைத்துள்ளார். இவருடன் சேர்ந்து தான் தற்போது முகேஷ் அம்பானி ஸ்போர்ட்ஸ் டிரிங்க் அறிமுகம் செய்ய உள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் முத்தையா முரளிதரனுக்கு இடையிலான இன்த கூட்டணி, குளிர்பானத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் உற்பத்தி மற்றும் பாட்டிலிங் வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது.
ஸ்பின்னர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்போர்ட்ஸ் டிரிங்க்-ன் உற்பத்தி மற்றும் பாட்டிலிங் பணிகளை மைசூரில் உள்ள முத்தையா பெவரேஜஸ் ஆலையில் நடைபெறும். இந்த ஆலை ஏற்கனவே RCPL-ன் கேம்பா குளிர்பானங்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையில் பாட்டிலிங் செய்ய கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே உள்ள கூட்டணி தற்போது ஸ்பின்னர் என்ற ஸ்போர்ட்ஸ் டிரிங்க் உற்பத்தி வரையில் செல்ல உள்ளது.
இந்த புதிய ஸ்பின்னர் என்ற ஸ்போர்ட்ஸ் டிரிங்க் 150ml பாட்டில்களின் விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கெட்டோரேட் மற்றும் பவரேட் போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் போட்டிப்போட முடிவு செய்து ரிலையன்ஸ் மற்றும் முத்தையா முரளிதரன் கூட்டணி களத்தில் இறங்கியுள்ளது.
ஸ்பின்னர் குளிர்பானத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ஒரு பெரிய திட்டக்தை செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிகிறது. மேலும் கோடை காலக்திற்குள் இந்தியா முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும் என முக்கிய இலக்கும் இக்கூட்டணி கொண்டு உள்ளது.
ரெட் புல், ஸ்டிங் மற்றும் தம்ஸ் அப் சார்ஜ் போன்ற எனர்ஜி டிரிங்க் சந்தையில் கணிசமான வளர்ச்சியைப் பார்த்தாலும், இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் வகையில் பெரிய அளவில் யாரும் வர்த்தகத்தை பெற முடியவில்லை. இந்தியாவில் சுமார் ரூ.240 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த சந்தை இக்கூட்டணிக்கு ஜாக்பாட் ஆக மாறும என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications